அரசியல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்றது-வைகோ பேட்டி!

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது தமிழகத்தினரை நெற்றுப்பொட்டில் எட்டி உதைப்பதற்கு சமம் என்று கரூரில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்றது-வைகோ பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தி.மு.க வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ பிரச்சாரம் மேற்கொள்ள கரூர் வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:

மத்திய அரசு விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு வேதாந்தா குழுமத்திற்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. விவசாய நிலங்களை அடியோடு, அழிப்பதற்கும் விவசாயிகளை அடியோடு அழிப்பதற்கும் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்ற அதே ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்திற்கு லைசன்ஸ் கொடுத்திருப்பது தமிழரை நெற்றிப்பொற்றில் எட்டி உதைப்பதற்கு சமம் ஆகும் எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories