அரசியல்

ஏழைகளை சந்திக்க பிரதமர் மோடிக்கு நேரமில்லை - பிரியங்கா காந்தி  

உத்தரபிரதேசத்தில் உள்ள காஜியாபாத் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக டோலிசர்மா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரியங்கா பிரசாரம் செய்தார்

ஏழைகளை சந்திக்க பிரதமர் மோடிக்கு நேரமில்லை - பிரியங்கா காந்தி  
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உத்தரபிரதேசத்தில் உள்ள காஜியாபாத் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக டோலிசர்மா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரியங்கா பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். ஜப்பானுக்கு சென்று அங்குள்ளவர்களை சந்தித்து பேசுகிறார்.பாகிஸ்தானுக்கு போய் உணவருந்தி வருகிறார். சீனாவுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்திக்கிறார். ஆனால் அவருடைய சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள ஏழை மக்களை அவர் சந்தித்து பேசுவதை நாம் பார்த்து இருக்கிறோமா?

அவருடைய தொகுதியில் உள்ள ஏழைகளை சந்திக்க அவருக்கு நேரம் இல்லை. அனைத்து பிரச்சனைகளிலும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவையே பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு மக்களுக்காக என்ன செய்து இருக்கிறது? எதுவும் செய்யவில்லை.

இவ்வாறு பிரியங்கா பேசினார்.

banner

Related Stories

Related Stories