உணர்வோசை

மக்கள் துயரம் புரிகிறது - பிரதமர் மோடி: “அழுத கண்ணீரும் அழிந்த சாம்ராஜ்யமும்!”

மோடியின் கொடிய ஆட்சி இந்தியா முழுவதும் வேரூன்ற விட்டதின் பலனை மக்களுக்கு கொரோனா உணர்த்தியிருக்கும் அதற்கு விரைவில் மக்கள் வெந்நீர் ஊற்றுவார்கள் என்பது மோடிக்கும் கொரோனா உணர்த்திருக்கும்.

மக்கள் துயரம் புரிகிறது - பிரதமர் மோடி: “அழுத கண்ணீரும் அழிந்த சாம்ராஜ்யமும்!”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதுமாக இரண்டு கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் நிறைவு செய்திருக்கிறோம். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில் இன்று முதல் நான்கு நாட்கள் கட்டாய முழு ஊரடங்கை சென்னை, சேலம், திருப்பூர்,கோவை,மதுரை ஆகிய மாநகராட்சிகளில் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து திருவாரூர், நாகை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.

இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் கடந்து வந்த முட்கள் நிறைந்த பாதையை பார்ப்போம்.

கொரோனா உயிர்கொல்லி நுண்ணுயிர் கிருமியை அழிப்பதற்கு உலக நாடுகள் எங்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதினால் இதனை கட்டுப்படுத்த ஒரே தீர்வு ஊரடங்குதான் என்று உலக நாடுகள் தீர்மானித்தன. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி திடீரென்று 21 நாள் ஊரடங்கை பிரதமர் அறிவித்தார். அதற்கு முன்னராகவே தமிழக அரசு கடந்த மார்ச் 16ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்தையும் மூட முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த நாடு முழுவதுமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் மாதம் 14ம் தேதி முடிவடைந்துவிடும் என்ற நம்பிக்கையில் வெகுஜன மக்கள் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். ஆனால் ஏப்ரல் 14ம் வந்தது பிரதமர் மோடியும் வந்தார். மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவும் பிறப்பித்தார். மக்கள் துயரக் கடலில் மூழ்கினர். ஊரடங்கு அமல் படுத்துவது சமூக தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் என்பது அனைவரும் அறிந்ததே! இதில் என்ன விசித்திரம் என்றால் சமூக விலகல் அவசியம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அறிவுறுத்தும் அரசே நேற்று முன்தினம் (ஏப்ரல் 24) அன்று தமிழகத்தில் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு 4 நாட்களுக்கு அமல்படுத்தப்படும், தற்போதைய தளர்வுகள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது.

மக்கள் துயரம் புரிகிறது - பிரதமர் மோடி: “அழுத கண்ணீரும் அழிந்த சாம்ராஜ்யமும்!”

அறிவித்ததோ மதியம் 2 மணிக்கு. மக்கள் பதட்டத்திற்கு உள்ளானார்கள். ஏனென்றால் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மளிகை கடைகள், காய்கனி அங்காடிகள் செயல்பட அனுமதித்திருந்தது. நேற்று (ஏப்ரல் 25) சமூக விலகல்; சமூக இடைவெளி; இத்தனை நாள் கடைபிடித்து வந்த ஊரடங்கு அனைத்தும் காற்றில் பறக்கவிட்டது போல் மக்கள் மாமாங்கமென கடைகளில் கூடினர். இதற்கெல்லாம் யார் காரணம்? சேலத்து சேக்கிழார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிபுத்திசாலித்தனத்தினால் உதித்த அறிவியல் ஆலோசனகளினால் போடப்பட்ட உத்தரவுகளே காரணம். இந்த மாதிரியான சரியான செயல்திட்டம் இல்லாத உத்தரவுகள் மக்களைக் காப்பாற்றப் போகிறதா? காவு வாங்கப் போகிறதா? என்றே தெரியவில்லை.!

மக்கள் பிரச்சனை தெரிகிறது; மக்கள் துயரம் புரிகிறது என்று சொன்ன பிரதமருக்கு என்ன பிரச்சனை தெரிந்தது; என்ன துயரம் புரிந்தது என்று தெரியவில்லை. அவர் இருக்கும் உயரத்திற்கு அடித்தட்டு மக்களின் துயரம் ஒருபோதும் புரியப்போவதில்லை.

இந்தியாவில் சுமார் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருந்தது. போக்குவரத்து, சுற்றுலாத்துறை மற்றும் ஓட்டல் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த துறைகளில் சுமார் 5 சதவிதம் சரிவு காணப்பட்டாலே, இந்தியாவின் மொத்த வளர்ச்சி சுமார் 1 சதவிதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ரசாயன தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்தை பொறுத்தவரை, நாள் ஒன்றிற்கு சுமார் 80 முதல் 90 சதவிதம் வரை சரக்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நிறுவனங்கள் , பொருளாதாரம் சார்ந்த இழப்புகள்.

மக்கள் துயரம் புரிகிறது - பிரதமர் மோடி: “அழுத கண்ணீரும் அழிந்த சாம்ராஜ்யமும்!”

சாமானிய மக்கள் படும் சொல்லொணா துயரங்கள் பல உள்ளன. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 12 கோடி பேர் கடந்த 4 வாரங்களில் வேலையை இழந்திருக்கிறார்கள். தினக்கூலிகள் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்திருக்கிறார்கள். லக்னோவில் ஒருவர் சாலையில் கொட்டப்பட்டுள்ள பாலை நாய்களுடன் சேர்ந்து சேகரித்த செய்தி பலரும் கண்டும் கேட்டும் அறிந்திருப்போம். இந்த செய்தியே ஊரடங்கு உத்தரவு மக்களை எந்த நிலைக்கு தள்ளியுள்ளது என்பதை உணர்த்துகிறது. சாலையோரத்தில் வசிக்கும் ஏழை மக்கள் சிலர் தொலைக்காட்சி ஒன்றில் பேசியதை பதிவிடுகிறேன் : “ஐயா நாங்க கொரோனாவால சாவோமாண்ணுத் தெரியல, ஆனா பசில செத்துடுவோம் போல இருக்கு” என்பதுதான் அந்த குரல்.

எந்த வித முன்னறிவிப்புமின்றி திடீர் ஊரடங்கு அறிவித்ததினால் ஏற்பட்ட பிரச்சனைகள் இன்னும் பற்பல. மார்ச் 26ம் தேதி டெல்லியில் உணவு கொண்டு சென்று வீடுகளில் ஒப்படைக்கும் டெலிவரி பாயாக பணியாற்றிய ரன்வீர் சிங் தனது சொந்த ஊரான மத்திய பிரதேசத்திற்கு நடத்தே சென்றுள்ளார். அப்போது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ உதவியையும் பெற முடியாமல், ஆக்ராவில் உயிரிழந்தார். 62 வயதான குஜராத்தின் சூரத்தை சேர்ந்த கங்காதரன் போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளார். அப்போது மயக்கம் அடைந்த நிலையில், திரும்பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

மக்கள் துயர் புரிந்துக்கொண்ட பிரதமரின் நிர்வாகத்தின் கோளாறுகள் நாடு முழுவதும் பரவியிருந்தது. ஏப்ரல் 14ம் தேதி இரயில்கள் இயக்கப்படும் என பரவிய வதந்தியை நம்பிய வடமாநிலத் தொழிலாளர்கள் மும்பை பாந்த்ரா இரயில் நிலையத்தில் ஆயிரக் கணக்கில் குவிந்துள்ளனர். பாந்த்ரா இரயில் நிலையத்தை அடுத்துள்ள சேரிப் பகுதிகளில் தங்கியுள்ள பீகார், உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மதியம் 3:45 மணி அளவில் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி இரயில் நிலையம் நோக்கி விரைந்துள்ளனர். நான்கு மணிக்குள் சுமார் 1500 பேர் கூடியுள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.

மக்கள் துயரம் புரிகிறது - பிரதமர் மோடி: “அழுத கண்ணீரும் அழிந்த சாம்ராஜ்யமும்!”

அதே நாளில் மும்ப்ராவில் உள்ள ரஷீத் காம்பவுண்ட் பகுதியில் சுமார் 300 இடம் பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கூடி தங்களுக்கு உணவும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்க வேண்டும் என போராடியுள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நன்கு செழித்து வளர்ந்த காலிபிளவர் தோட்டங்களுக்கு தேவையான பூச்சி மருந்து மற்றும் உரம் போன்றவை ஊரடங்கு நடவடிக்கையால் கிடைக்காமல் போனதால் பூக்களை புழுக்களே உண்டுவிட்டன. பிரதமர் மக்கள் பிரச்சனையை தெரிந்துக்கொண்டாரா?

எந்த திட்டமிடலும் இன்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் விளைவாக கூலித் தொழிலாளர்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர் – இதில் வடமாநிலங்களைச் சேர்ந்த இடம் பெயர்ந்த கூலித் தொழிலாளர்களின் நிலையோ எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல், இவர்களை போலீஸ் குண்டாந்தடிகளைக் காட்டி மிரட்டி அடக்க முடியாது – பசியின் வலிமைக்கு முன் குண்டாந்தடிகள் தாக்குப் பிடிக்க முடியாது. அந்த நிலையை நோக்கி மெல்ல மெல்ல நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

சரி போகட்டும்! மக்கள் துயர் துடைக்க மத்திய அரசு வெளியிட்ட அறிவுப்புகளையும் பார்ப்போம்.. கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் பொருளாதாரச் சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள், மூன்று மாதங்களுக்கு தலா ரூ.1,000, பெண்களுக்கு ரூ.500 எனப் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. மத்திய நிதி அமைச்சர் கூறுகையில் “ஏழை மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு 2,000, அடுத்த மூன்று மாதங்களுக்கு கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு இலவசம் உட்பட 1.70 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டங்கள் வழங்கப்படும்” என்றார்.

மக்கள் துயரம் புரிகிறது - பிரதமர் மோடி: “அழுத கண்ணீரும் அழிந்த சாம்ராஜ்யமும்!”

மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஷா அல்லது அரசு சுகாதார பணியாளர்களுக்கு தலா 50 லட்சம் வரையிலான காப்பீடு வழங்கப்படும். பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் முதல் கட்டமாக ₹2,000 உடனடியாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும். இதன் மூலம் 8.69 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள். ஏழ்மை நிலையில் உள்ள மூத்த குடிமக்கள், கணவனை இழந்தவர்கள், மாற்று திறனாளிகளுக்கு 1,000 கருணைத்தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும். இதனால் 3 கோடி பேர் பயன் அடைவார்கள். இவை அனைத்தும் அறிவுப்புகளே.

இந்த அறிவிப்புகள் குறித்து சென்னை பல்கலைக் கழக பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம் கூறீயதாவது: "1.70 லட்சம் கோடி ரூபாய் இதற்காக செலவழிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஆனால், இதற்கான பணம் எங்கேயிருந்து வரும் என்பதை அவர் அறிவிக்கவில்லை. கடந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போதே, கிட்டத்தட்ட மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை இருந்தது. அதற்குப் பிறகு திருத்தப்பட்ட மதிப்பீடுகள் வந்தபோது, பற்றாக்குறை மேலும் 1.15 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட 4.15 லட்சம் கோடி ரூபாய் ஏற்கனவே பற்றாக்குறை உள்ளபோது, இந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வரும் என்ற கேள்வியெழுகிறது".

அறிவிப்புகள் வெளியிடுவதும் ; பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துவதும் ; ஒவ்வொரு கட்டத்திலும் ஊரடங்கு முடிவடைய போகும் காலத்தில் டி.வி . யில் தோன்றுவதும் பிரதம் மோடிக்கு பிரசித்தமே. ஆனால் மக்களின் பிரச்சனைகளும் அவருக்கு தெரியவில்லை அவர்களின் துயரமும் அவருக்கு புரியவில்லை. மக்களின் துயர் புரிந்தவரானால் தான் இராஜ்ய பரிபாலனம் செய்வதற்காக பாராளுமன்றக் கட்டடத்தை புனரமைக்கவும் ராஜபாதையை புனரமைக்கவும் ஒதுக்கப்பட்ட நிதி 20000 கோடியை ரத்து செய்து பசியாலும் பட்டிணியாலும் அவதிப்படும் மக்களுக்கு கொடுத்திருக்க வேண்டும்; வேலையிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளித்திருக்க வேண்டும்.

மக்கள் துயரம் புரிகிறது - பிரதமர் மோடி: “அழுத கண்ணீரும் அழிந்த சாம்ராஜ்யமும்!”

அரசுகளுக்கு அரசியல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. மக்களுக்கு உதவ அரசுகளிடம் பணமும் இல்லை; மனமும் இல்லை. இப்போது சாமானிய மக்களுக்கு பெரிதும் உதவியாக கரம் கொடுப்பது தன்னார்வலத் தொண்டு நிறுவனங்கள்தான். மக்களின் தேவையறிந்து அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று எத்தனையோ இளைஞர்கள்; தொண்டு நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து பணமாக; பொருளாக ; உணவாக பெற்று அதனை பாகுபாடின்றி துயர் கடலில் கரைந்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி கரை சேர்க்கிறார்கள்.

மோடியின் கொடிய ஆட்சி இந்தியா முழுவதும் வேரூன்ற விட்டதின் பலனை மக்களுக்கு கொரோனா உணர்த்தியிருக்கும் அதற்கு விரைவில் மக்கள் வெந்நீர் ஊற்றுவார்கள் என்பது மோடிக்கும் கொரோனா உணர்த்திருக்கும். அது மட்டுமின்றி, மனிதன் மரித்தாலும் மனிதம் மறிப்பதில்லை என்ற தத்துவத்தை கொரோனா உணர்த்தியிருக்கிறது.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை – வள்ளுவர் அன்றே கூறியிருக்கிறார். ஒரு சாம்ராஜ்யத்தை அழிக்க படை தேவையில்லை நாட்டு மக்களின் கண்ணீர் போதுமென்று. அந்த குரலுக்கேற்ப ; கொடுங்கோல் ஆட்சி செய்யும் மோடி அரசு மிக விரைவில் அஸ்தமனமாகப் போவது உறுதி.

பிரதமர் மோடிக்கு மக்கள் பிரச்சனை தெரியப் போவதுமில்லை; மக்கள் துயரம் புரியப்போவதுமில்லை!

- அஜய் வேலு

banner

Related Stories

Related Stories