விளை பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வது தொடங்கி எல்லா வகையிலும், தமிழக விவசாயிகளை இரண்டாம் தர குடிமக்களாகவே மத்திய பா.ஜ.க அரசு நடத்துகிறது என முரசொலி தமது தலையங்கத்தில் சாடியுள்ளது.
மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டால் தமிழக கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், இந்த நிலையை இளக வைக்க வேண்டுமானால் கரும்பு உற்பத்தி பெருக்க ஆக்க நிதியிலிருந்து, வேளாண் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தேவையான நிதியை வழங்க முன்வர வேண்டும் என்றும் முரசொலி கோரிக்கை விடுத்துள்ளது.