பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞரைத் தொடர்ந்து கழகத்தின் கொள்கைகளை நிறைவேற்றும் லட்சியப் பாதையில், பெறும் பொறுப்புடையவராய் இன்று தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார், பேரணியாக நாம் அவர் பின்னே நிற்கிறோம். சிந்து சமவெளிக் கால எதிரிகள் இன்று வேறு முகமூடியிட்டு தாக்குதலை தொடங்கி விட்டனர்.
அரசியல் துரோகிகளும் நம் எதிரிகளோடு கைகோர்த்துள்ள நிலையில் நாம் எல்லா வகையிலும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். அதற்காக நாம் ஜனநாயக வழியில் அறஞ்சார்ந்து எல்லா வகைத் தயாரிப்புகளோடும் ஆயத்தமாய் இருக்க வேண்டும் என, ஆகஸ்ட் 27,2019 அன்று சேலத்தில் நடந்த ‘திராவிடர் கழகத்தின் பவள விழா’ மாநாட்டில் சூளுரைக்கப்பட்டது குறித்து இன்று முரசொலி நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது.