நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்த பேரியக்கமாக திராவிடர் கழகம் உருவான நாள் இன்று. சேலத்தில் துவங்கப்பட்ட திராவிடர் கழகத்திற்கு இன்று அதே இடத்தில் பவளவிழா கொண்டாடப் படுகிறது.
இந்தத் திருநாளில் அதே சேலத்தில், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சக்தியான கலைஞருக்கு சிலை திறந்து வைக்கிறார் தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழினத்தை விழிப்புறச்செய்த திராவிடர் கழகத்தின் பவளவிழாவை நாமும் கொண்டாடுவோம்; வாழ்த்துவோம் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.