மு.க.ஸ்டாலின்

CAA : “பா.ஜ.க.வையும், அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CAA : “பா.ஜ.க.வையும், அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை சட்டங்களில் (CAA ) மாற்றத்தை கொண்டுவருவதாக அறிவித்தது. மேலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் (NRC) அறிமுகப்படுத்தியது. குடியுரிமை சட்டத்தில் மத ரீதியான பாகுபாடு கட்டப்படுவதாகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான சரத்துக்கள் இருப்பதாகவும் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

CAA : “பா.ஜ.க.வையும், அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதனை எதிர்த்து நாடுமுழுவதும் பெரும் போராட்டம் எழுந்தது. இந்த சூழலில் கொரோனா பேரிடர் வந்ததால் அந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் தான் கொண்டுவந்த சட்டங்களையும் ஒன்றிய பாஜக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனிடையே வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக CAA சட்டம் நடைமுறை படுத்தப்படும் என ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாகூர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

ஒன்றிய அமைச்சரின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த சட்டத்துக்கு பாஜக ஆளாத பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒன்றிய அரசு இதிலிருந்து பின் வாங்கப்போவதாக அறிவிக்கவே இல்லை.

CAA : “பா.ஜ.க.வையும், அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) நேற்று அரசிதழில் வெளியிட்டு அதனை ஒன்றிய பாஜக அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதுமுள்ள சிறுபான்மையின மக்கள், எதிர்க்கட்சிகள் என பலரும் கடும் விமர்சனம் செய்து வருவதோடு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது.

மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க. திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர். அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!

CAA : “பா.ஜ.க.வையும், அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தில் பாஜக அரசு CAA சட்ட மசோதாவை கொண்டுவந்து மக்களவையில் தங்களுக்கு இருந்த பெரும்பான்மை காரணமாக அதனை நிறைவேற்றியது. ஆனால், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் இருந்த நிலையில், அதிமுகவின் 13 உறுப்பினர்களின் ஆதரவோடு அந்த மசோதா நிறைவேறியது.

மாநிலங்களவையில் CAA சட்ட மசோதாவை 124 உறுப்பினர்கள் ஆதரித்தனர். அவையில் இருந்த 13 உறுப்பினர்களும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அதே நேரம் 99 வாக்குகள் இந்த மசோதாவுக்கு எதிரான விழுந்தன. இந்த சூழலில் அதிமுகவின் 13 உறுப்பினர்களும் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருந்தால் CAAவுக்கு ஆதரவாக 124-13 = என 111 வாக்குகளும், CAAவுக்கு எதிராக 99+13 = என 112 வாக்குகளும் என விழுந்து CAA சட்ட மசோதா தோல்வியை சந்தித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories