மு.க.ஸ்டாலின்

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாடு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது !

சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாடு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக 23.5.2023 அன்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

இன்று (24.5.2023) சிங்கப்பூர் நாட்டிற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

 சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாடு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது !

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

 சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாடு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது !

அதன்பின்னர் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

1. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI) புரிந்துணர்வு ஒப்பந்தம்

- ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, பல்கலைக்கழக ஒத்துழைப்பு, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, தமிழ்நாட்டில் தொழில்துறைகளின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு போன்றவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக...

2. தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுனத்திற்கும் Singapore India Partnership Office (SIPO) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

- பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் தொடர்பாக...

3. தமிழ்நாட்டின் FameTN மற்றும் Startup TN நிறுவனங்களுக்கும் Singapore India Partnership Office (SIPO) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

- தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப தொடர் கல்விக்கான திறன் மேம்பாடு, StartupTN மூலம் ஸ்டார்ட்-அப் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு கூட்டாண்மைகளை எளிதாக்குதல் போன்றவற்றிற்காக...

4. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் Hi-P International Pvt. Ltd., Singapore இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

- 312 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மின்னணு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்திட...

5. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Singapore University of Technology & Design (SUTD), Singapore இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

- தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் எதிர்கால மற்றும் தொழில்துறைக்கு தேவையான பாடத்திட்டம் மற்றும் பாட மேம்பாட்டிற்கான அறிவுப் பங்குதாரராக நிறுவுவதற்காக...

6. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் ITE Education Services, Singapore இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

- தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி துறையில் நீண்ட கால கூட்டாண்மையை நிறுவுதல், தமிழ்நாட்டில் தொழிற்சாலை திறன் பள்ளிகளை அமைத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்றவற்றிற்காக..

இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அடுத்த கட்டத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories