மு.க.ஸ்டாலின்

அனைத்து துறையிலும் தமிழ்நாடு முன்னணி வகிக்க வேண்டும் என்பதே லட்சியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

அனைத்து துறையிலும் தமிழ்நாடு முன்னணி வகிக்க வேண்டும் என்பது எங்களது இலட்சியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அனைத்து துறையிலும் தமிழ்நாடு முன்னணி வகிக்க வேண்டும் என்பதே லட்சியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

செங்கல்பட்டு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ளது Pegatron Technology India நிறுவனத்தின் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் " இங்கு 1100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மற்றும் 14 ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறது.அதிலும் பெருமளவில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதை அறிந்து நான் உண்மையிலேயே பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

பெண்களை சமூக,பொருளாதார வளர்ச்சி கொண்டவர்களாக மாற்றும் - உயர்த்தும் திராவிட மாடல் ஆட்சி காலத்தில் அதற்கு வலிமை சேர்ப்பதைப் போல உங்களது செயல்பாடு அமைந்துள்ளது. பெண்கள் அதிகமாக நிறுவனங்களில் பணியாற்றச் செல்லும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.இப்போது மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியை ஏற்படுத்தி தந்துள்ளோம்.இதனை அரசு தனது கடமையாக நினைக்கிறது.இதன் மூலமாக பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெறுகிறார்கள்.

பெண்கள் பணிபுரிவதற்கு ஏதுவான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. அவர்களின் பாதுகாப்பு, மற்றும் மரியாதை இங்கு சிறப்பாக பேணிக்காக்கப்படுகிறது. பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மட்டுமின்றி, பெண்கள் பணியிடங்களுக்கு சென்று வருவதை எளிதாக்கும் வகையில் சூழலும் உருவாக்கித் தரப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, பெண்களை அதிக அளவில் பணியமர்த்தினால் அதற்கான மானியங்கள் வழங்குவது போன்ற பல ஆதரவுச் சேவைகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

அனைத்து துறையிலும் தமிழ்நாடு முன்னணி வகிக்க வேண்டும் என்பதே லட்சியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதன் மூலமாக அந்த வட்டாரம் - மாவட்டம் வளர்ச்சி பெறுகிறது.அதனை சுற்றி இருக்கும் சமூகம் வளர்ச்சி அடைகிறது -இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது என்கிற அடிப்படையில் தான் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகுவதை ஊக்கப்படுத்தி வருகிறோம்.புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 18 மாதங்களில் பெகாட்ரான் நிறுவனம் உற்பத்தியைத் துவக்கியிருப்பது, தமிழகத்தில் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான சூழ்நிலையை இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

*நில ஒதுக்கீடு,

*வரையறுக்கப்பட்ட காலகட்டங்களுக்குள் அனுமதிகள்,

*ஊக்கத் தொகுப்புச் சலுகை ஆகியவற்றை உடனுக்குடன் வழங்கி இருக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்னால் ஒரு தகவல் வெளியானது. அகில இந்திய அளவில் வணிகம் புரிதலை எளிதாக்குதல் தரவரிகையில், சாதனையாளர் மாநிலம் என்ற அங்கீகாரம் பெற்ற முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது என்பது தான் அந்த செய்தி.அதற்கு இந்த பெகாட்ரான் நிறுவனமே சாட்சியாகும்.முதலீட்டுச் சூழ்நிலை சிறந்து விளங்கினால் மட்டுமே, உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டவாறு தொழில் துவங்கிட இயலும் என்பதற்கு நீங்களே எடுத்துக் காட்டாக இருக்கிறீர்கள். உற்பத்தியில் -தொழிலில் -வர்த்தகத்தில் முன்னேறிய மாநிலமாக இருக்க அனைத்து செயல்பாடுகளையும் செய்து வருகிறோம்.வழக்கமான தொழில்களைத் தாண்டி புத்தாக்கத் தொழில்களில் ஆர்வம் காட்டி வருகிறோம்.

நான்காம் தொழில் புரட்சியில் (Industry 4.0) மின்னணுவியல் துறை, மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இதுமாநிலத்தின் உற்பத்தி வரைபடத்தையே மாற்றியமைத்திடக் கூடிய வல்லமைபடைத்ததாக விளங்குகிறது. அதில் கவனம் செலுத்துகிறோம். இத்துறையில் தமிழ்நாடு மிகப் பெரும் வளர்ச்சி அடைந்து, இந்திய அளவிலான மின்னணுவியல் சார்ந்த உற்பத்தியில், 20 சதவிகித பங்களிப்பு அளித்து வருகிறது.கைபேசி உற்பத்தித் திட்டங்கள் மட்டுமல்ல, கணினிகள், கணினிச் சாதனங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், White goods என்று சொல்லப்படும் குளிர் சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், LED விளக்குகள் போன்ற உற்பத்தித் திட்டங்கள் தமிழ்நாட்டில் பரவலாக அமைந்துள்ளன.

அனைத்து துறையிலும் தமிழ்நாடு முன்னணி வகிக்க வேண்டும் என்பதே லட்சியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

தமிழ்நாடு அதிக அளவில் மின்னணுவியல் உற்பத்தித் திட்டங்களை ஈர்த்திருப்பதை இதன் மூலமாக அறியலாம்.இதைக் கருத்தில் கொண்டுதான், மின்னணுவியல் துறையை, தமிழ்நாடு அரசு வளர்ந்து வரும் துறை என்று வகைப்படுத்தியுள்ளது. வெகு விரைவில் தமிழ்நாடு மின்னணு வன்பொருள் கொள்கை வெளியிடப்பட உள்ளது. உள்நாட்டு உற்பத்தியை பன்மடங்கு அதிகரிப்பது மற்றும் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிப்பது என்ற நோக்கங்களுடன்தான், இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், மின்னணுவியல் துறை சார்பில் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள நிறுவனங்களை, தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர், ஓசூர் மற்றும் கோயம்புத்தூர் என்று மின்னணு உற்பத்தி மையங்கள் பெருகி வருகின்றன.

மின்னணுவியல் துறை மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் தமிழ்நாடு முன்னணி வகிக்க வேண்டும் என்பது எங்களது இலட்சியமாகும். முன்னணி பெற்றவுடன், முதல் நிலையை நோக்கி முன்னேற வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள். 2030ம் ஆண்டிற்குள் நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்கிற எங்களது இலட்சிய இலக்கு உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். இதன் பொருட்டு, உயர் தொழில் நுட்பத் திட்டங்களையும், பெருமளவில் வேலை வாய்ப்பு அளித்திடும் திட்டங்களையும் ஈர்ப்பதற்கு நாங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.ஒவ்வொரு துறையிலும், மதிப்புக் கூட்டு உற்பத்தி மேற்கொள்ளும் திட்டங்களையும், பன்முகப்படுத்தும் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.இவ்வாறான முயற்சிகளின் விளைவாக, சமீபத்தில்தான் ஒரு மிகப் பெரிய செமி கண்டக்டர் உற்பத்தித் திட்டத்தினை தமிழ்நாட்டில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து துறையிலும் தமிழ்நாடு முன்னணி வகிக்க வேண்டும் என்பதே லட்சியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

தற்போது, சீனாவில் தான், செல்ஃபோன் மாடல்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. அதனை மாற்றி, தமிழ்நாட்டினை செல்போன் மையமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்குடன் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம்.ஸ்மார்ட்ஃபோன் உற்பத்திக்கான முழு விநியோகச் சங்கிலியையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர நாங்கள் முயற்சிகளைமேற்கொண்டுள்ளோம்.இத்தகைய நேரத்தில் பெகாட்ரான் நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தித் திட்டம் இங்கே துவக்கப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.உற்சாகத்தை அளிக்கிறது.இதற்காக பெகாட்ரான் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில், உங்கள் இரண்டாவது கட்ட உற்பத்தித் திட்டத்தினையும் விரைவில் இங்கு துவங்க உள்ளீர்கள் என்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அரசு தரப்பில் அதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். மேலும், உங்களது விரிவாக்கத்திட்டங்களையும், பிற உற்பத்தித் திட்டங்களயும், தமிழ்நாட்டிலேயே நிறுவிட வேண்டும் என்று அன்புடன் நான் கோரிக்கை விடுக்கிறேன். அது மட்டுமல்ல, உங்களைப் போன்றே, பிற தொழில்நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிடஅழைத்து வாருங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories