இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது நேருவிற்கும் நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு இருந்ததால் தான் நேரு பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் தினத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''குழந்தைகள் நம் செல்வம், எதிர்காலம்! மண்ணில் நடமாடும் அந்த அழகிய மலர்களை அதே அழகோடும், அறிவோடும், உணர்வோடும் வளர்க்க வேண்டிய கடமை, பெற்றோர்கள் அனைவருக்கும் இருக்கிறது.
பிள்ளைச் செல்வங்களை கண்ணும் கருத்துமாய் வளர்ப்போம்! அவர்களது உற்சாகமே நமக்கு ஊக்கம்!'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.