மு.க.ஸ்டாலின்

”பாச உணர்வுடன் மிலாது நபி வாழ்த்து” - இஸ்லாமிய மக்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிக்கை!

மிலாது நபித் திருநாள் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

”பாச உணர்வுடன் மிலாது நபி வாழ்த்து” - இஸ்லாமிய மக்களுக்கு  மு.க.ஸ்டாலின் அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மிலாது நபித் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ''அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நன்னாளான மிலாது நபித் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நபிகள் நாயகம் அவர்கள், தன் தாயின் கருவறையிலிருந்த போதே தந்தையை இழந்தவர். பிறகு தனது ஆறு வயதில் தாயாரை இழந்தவர். இளம் வயதிலேயே துயரச் சூழலில் வளர்ந்தாலும், பொய் பேசாமல், தனது வாக்குறுதிகளில் இருந்து துளியும் தவறாமல் தனித்துவம் மிக்கவராகத் திகழ்ந்த தியாக சீலராவார்.

ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் விளங்கிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள், “கோபம், பொறாமை, புறம் பேசுதல்” ஆகியவற்றை அறவே துறந்து, உயரிய சிந்தனைகளை உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு அர்ப்பணித்தவர்.

“ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்” என்ற மகத்தான மனிதநேயத்திற்குச் சொந்தக்காரர். அண்ணல் நபிகளாரின் சீரிய போதனைகளும், சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவைகள் மட்டுமின்றி, அவை பொன்னேபோல் போற்றி, ஒழுகிப் பாதுகாக்கப்பட வேண்டியவைகள் ஆகும்.

அண்ணல் நபிகளாரின் போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் ஆழமான பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாய மக்கள் அனைவருக்கும், எனது உளம் கனிந்த மிலாது நபித் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories