மு.க.ஸ்டாலின்

“இனியொரு உயிர் பலியாகிவிடக் கூடாது; இதுதான் சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி” - மு.க.ஸ்டாலின்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தின் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“இனியொரு உயிர் பலியாகிவிடக் கூடாது; இதுதான் சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி” - மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் 5 நாள் மீட்பு போராட்டத்தை அடுத்து அழுகிய நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டான்.

அதனையடுத்து, உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

“இனியொரு உயிர் பலியாகிவிடக் கூடாது; இதுதான் சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி” - மு.க.ஸ்டாலின்

அதன் பின்னர் மணப்பாறை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குழந்தை சுர்ஜித்தின் மறைவுக்கு அரசியல் தலைவர்கல், திரை பிரபலங்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“இனியொரு உயிர் பலியாகிவிடக் கூடாது; இதுதான் சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி” - மு.க.ஸ்டாலின்

அதில், “நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான். சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?

அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்!”

“இனியொரு உயிர் பலியாகிவிடக் கூடாது; இதுதான் சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி” - மு.க.ஸ்டாலின்

“ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி!”

banner

Related Stories

Related Stories