ஜல்லிக்கட்டு

“மதுரையை தொடர்ந்து திருச்சி பெரியசூரியூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு” : அசத்தல் பரிசை அறிவித்த விழாக்குழு!

திருவெறும்பூர் அருகே உள்ள பெரியசூரியூரில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 750 மாடுகளும் 550 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.

“மதுரையை தொடர்ந்து திருச்சி பெரியசூரியூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு” : அசத்தல் பரிசை அறிவித்த விழாக்குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று, சூரியூர் நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம்.

இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும் 550மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர். நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் மாடு முதலில் அவிழ்த்து விடப்படும். அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு களைகள் அவிழ்த்து விடப்படுகிறது இந்த போட்டியை ஆர்.டி.ஓ பார்திபன் தொடங்கிவைத்தார்

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் டிவி, மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும் சிறந்த காளைக்கும் பைக்கும், இரண்டாவது பரிசாக வீட்டுமனையும் வழங்கப்படுகிறது.

“மதுரையை தொடர்ந்து திருச்சி பெரியசூரியூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு” : அசத்தல் பரிசை அறிவித்த விழாக்குழு!

முன்னதாக கால்நடை இணை இயக்குனர் மும்மூர்த்தியை தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா ஜல்லிக்கட்டு போட்டிக்கு கலந்து கொள்வதற்கு உரிய தகுதி உள்ளதா என்பதை மருத்துவ ஆய்வு செய்தனர். அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.

அதேபோல் திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதை பொருட்கள் உட்கொண்டு உள்ளார்களா என்பதை பறிசோதனையும் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைப்பவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சையும் அளிக்கின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருவெறும்பூர் டி.எஸ்.பி அறிவழகன் தலைமையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக கேலரிகள் மற்றும் தடுப்பு வேலியை அருகில் வாகனங்களை பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories