இந்தியா

மேம்பால சுவரில் மோதிய பைக் : தூக்கி வீசப்பட்ட இருவர் - திக் திக் வீடியோ!

ஆந்திரா அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேம்பால சுவரில் மோதிய பைக் : தூக்கி வீசப்பட்ட இருவர் - திக் திக் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் இரண்டு பேர் தூக்கி வீசப்பட்டு 40 அடி கீழே சாலையில் விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் படுகாயம் அடைந்த இளைஞரை மீட்டு அருகே உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உயிரிழந்த இருவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட அறிக்கையில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.மேலும் உயிரிழந்த இருவர் தனவரபு குமார், பவன் குமார் என போலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories