இந்தியா

3 நாட்களில் 3 சம்பவங்கள்... போதைப்பொருளின் தலைநகரம் என்று நிரூபிக்கும் குஜராத்... விவரம் என்ன?

பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தின் கடல் பகுதியில், 173 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தது போதைப்பொருள் தடுப்பு பிரிவு.

3 நாட்களில் 3 சம்பவங்கள்... போதைப்பொருளின் தலைநகரம் என்று நிரூபிக்கும் குஜராத்... விவரம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 13 ஆம் தேதி மாநிலங்களவையில் வைக்கப்பட்ட அறிக்கையில் நாட்டிலேயே அதிகமான போதைப் பொருள் விற்பனையாகும் மாநிலங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள்தான் என்று கூறப்பட்டது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில்தான் அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

அதிலும் இந்தியாவில் போதைப் பொருள் கடத்தலின் தலைநகராக இருப்பது குஜராத் மாநிலம்தான் என்றே கூறப்படுகிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று குஜராத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து சிறிய வகை கப்பலில் கொண்டுவரப்பட்ட 3,300 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்களை காவல்துறை கைது செய்துள்ளது.

3 நாட்களில் 3 சம்பவங்கள்... போதைப்பொருளின் தலைநகரம் என்று நிரூபிக்கும் குஜராத்... விவரம் என்ன?

இதனைக் குறிப்பிட்டு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைந்து போதைப் பொருள் விற்கும் அளவுக்கு ‘பாதுகாப்பான’ மாநிலமாக குஜராத் இருக்கிறது என எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். தொடர்ந்து இந்த போதைப்பொருள் விவாகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பேசுபொருளாகவும் மாறியது.

இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை (27.04.2024) குஜராத் மற்றும் ராஜஸ்தானில் 149 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது ராஜஸ்தானில் இரண்டு ஆய்வுக்கூடங்களிலும், குஜராத்தில் அம்ரேலியில் ஓர் ஆய்வுக்கூடத்திலும் போதைப்பொருள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு போலீசார் ரெய்டு நடத்தி போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் ரசாயனங்கள் மற்றும் 149 கிலோ போதைப்பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று (28.04) குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே பாகிஸ்தானில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட ரூ.602 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

3 நாட்களில் 3 சம்பவங்கள்... போதைப்பொருளின் தலைநகரம் என்று நிரூபிக்கும் குஜராத்... விவரம் என்ன?

இந்த நிலையில் தற்போது மேலும் 173 கிலோ போதை பொருள் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தின் கடல் பகுதியில், 173 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தது போதைப்பொருள் தடுப்பு பிரிவு. மேலும் போதைப்பொருள் கடத்த பயன்படுத்திய இந்திய மீன்பிடி படகில் இருந்த 2 பேரையும் கைது செய்தனர்.

முன்னதாக கடந்த மார்ச் 12-ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் கடலோர போலீசாரால் இதுவரை ரூ.3.400 கோடிக்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

banner

Related Stories

Related Stories