இந்தியா

5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை : கோவாவில் அதிர்ச்சி !

கோவாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை : கோவாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கோவாவில் 5 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். அவரை பல இடங்களில் அவரின் பெற்றோர் தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியபின்னர் அவர்கள் அந்த சிறுமியை கண்டுபிடித்துள்ளனர்.

கோவாவின் வட்டேம் பகுதியிலுள்ள கட்டுமான தளத்துக்குப் பின்னர் மயங்கிய நிலையில் சிறுமியை அவரது பெற்றோர் கண்டறிந்துள்ளனர். பின்னர் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை : கோவாவில் அதிர்ச்சி !

தொடர்ந்து சிறுமியின் பிரேத அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி போலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து கட்டுமான தளத்தில் பணிபுரிந்த 20 தொழிலாளர்களிடம் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்து இரு நாட்கள் ஆன நிலையில், இதுவரை குற்றவாளிகளை போலிஸார் கண்டுபிடிக்கமுடியாமல் திணறி வருகின்றனர். இந்த சம்பவம் கோவாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories