இந்தியா

நீட் ரத்து, ஏழை மகளிருக்கு ரூ.1 லட்சம் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

நீட் ரத்து, ஏழை மகளிருக்கு ரூ.1 லட்சம் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி, ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக இந்த தேர்தலில் களம் காணுகிறது.

கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜக அரசுக்கு எதிராக நாடுமுழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளது. இந்த எதிர்ப்பலைகளுக்கு அஞ்சி நடுங்கும் ஒன்றிய பாஜக அரசு, இந்தியா கூட்டணிக் கட்சிகள் மீது அமலக்காத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

அமலக்காத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ வைத்து எதிர்க்கட்சிகளை முடக்கும் பாஜக அரசின் வியூகம் தோல்வியை அடைந்துள்ளது என்பது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மூலம் தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது. மேலும் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பலர், வேட்பாளர் போட்டியில் இருந்து விலகி வருகின்றனர். மேலும் சில வேட்பாளர்கள் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, இந்தியா கூட்டணி பக்கம் நகர்ந்துள்ளனர்.

நீட் ரத்து, ஏழை மகளிருக்கு ரூ.1 லட்சம் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்!

இதற்கிடையில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் உள்ள இந்தியா கூட்டணி கடந்த வாரம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் முக்கிய அறிவிப்பாக, பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, கச்சத்தீவு மீட்பது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இந்தியா கூட்டணிக்கு பெரும் பலத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், நீட், கியூட் தேர்வுகள் மறு ஆய்வு செய்யப்படும். மாநில அரசுகள் விருப்பப்பட்டால் மட்டுமே அந்த மாநிலங்களில் நீட் தேர்வு அமல்படுத்தப்படும். மாநிலங்களுடன் கலந்தாலோசித்து புதிய கல்விக் கொள்கை மாற்றப்படும்.

சமூகநீதியை உறுதி செய்ய நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்டம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். ஏழை மகளிருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

நீட் ரத்து, ஏழை மகளிருக்கு ரூ.1 லட்சம் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்!

பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் இட ஒதுக்கீடுக்கு இருக்கும் 50% உச்சவரம்பு சட்டத்திருத்தம் மூலம் அதிகரிக்கப்படும்.

அரசு மற்றும் பொதுத் துறை வேலைகளில் நிலவும் ஒப்பந்த முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, முறையான பணி நியமன முறை உறுதி செய்யப்படும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கொண்டுவரப்படாது. ரயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணசலுகை மீண்டும் வழங்கப்படும். புதுச்சேரி, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும். எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவினால் உடனடியாக தகுதி இழக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்.

நாடு முழுவதும் மாணவர்களுக்கு 1 முதல் 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும். அரசு பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும்.

அனைத்து விசாரணை அமைப்புகளும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும். தேர்தல் நன்கொடை பத்திர ஊழல், பெகாசஸ் முறைகேடு, ரபேல் ஊழல் உள்ளிட்டவை குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

பிற நாட்டு கடற்படைகளால் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் புதிய கொள்கை, மானிய விலையில் டீசல், படகுகளுக்கு காப்பீடு என மீனவர்களுக்கு திமுக வழங்கிய வாக்குறுதிகளை உள்ளடக்கி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, நீட், ஜி.எஸ்.டி மற்றும் புதிய கல்விக் கொள்கையில் மாநில அரசின் முடிவுக்கு முன்னுரிமை, ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறை கொண்டு வரப்பட மாட்டாது, நூறு நாள் வேலைக்கான தினசரி ஊதியம் ரூ.400, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான தனிச்சலுகை, இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பு 50% மேல் அதிகரிப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, அக்னிபாத் திட்ட ஒழிப்பு, மீண்டும் திட்டக் கமிஷன், தொழிலாளர் விரோத சட்டங்கள் கைவிடப்படும் போன்ற திமுகவின் வாக்குறுதிகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories