இந்தியா

உ.பி சிறுமிகள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரம் : தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் தந்தை மீட்பு !

மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 2 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உ.பி சிறுமிகள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரம் : தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் தந்தை மீட்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தின் பராவ்லியில் (Barauli) என்ற பகுதியில் 14 மற்றும் 16 வயதில் 2 சிறுமிகள் கடந்த 28-ம் தேதி திடீரென காணாமல் போயுள்ளனர். இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் தேடி அழையவே மறுநாள் அவர்கள் இருவரும் சற்று தொலைவில் இருக்கும் இடம் ஒன்றில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் இருக்கும் பகுதியின் அருகேயுள்ள செங்கற்சூளையின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சிறுமிகளை வலுக்கட்டயமாக மது குடிக்க வைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்தது தெரியவந்தது.

உ.பி சிறுமிகள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரம் : தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் தந்தை மீட்பு !

இதைத்தொடர்ந்து கான்ட்ராக்டர் ராம்ரூப் நிஷாத் (48), மகன் ராஜு (18), மருமகன் சஞ்சய் (19) ஆகிய 3 பேர் கைது செய்யபட்டு அவர்களிடம் இருந்து மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் அங்கே பூதாகரமான நிலையில், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் தந்தை உயிரிழந்துள்ளார்.

உ.பி சிறுமிகள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரம் : தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் தந்தை மீட்பு !

அதாவது உயிரிழந்த சிறுமிகளின் ஒருவரது தந்தை, அவரது வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள இடத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்த நபரின் உடலை மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவல்துறை பாதுகாப்புடன் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்டது.

வழக்கை திரும்பப்பெறுமாறு தொந்தரவு கொடுக்கப்பட்டதால், மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் கொலையா, தற்கொலையா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற அவலநிலை ஏற்படும் நிலையில், பாஜக அரசு இதனை வேடிக்கை பார்த்து வருவதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகிறது.

மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் மோடி, இதுவரை நாட்டிலுள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகிறது.

உ.பி சிறுமிகள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரம் : தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் தந்தை மீட்பு !

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

banner

Related Stories

Related Stories