இந்தியா

ரூ.3100 கடன்.. பூண்டு வியாபாரியை நிர்வாணமாக ஓட வைத்த கும்பல்.. உ.பி-யில் தொடரும் அவலம் - காங். கண்டனம்!

வாங்கிய கடனை திரும்பி செலுத்தாததால் வியாபாரியை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற 2 நபரை உத்திர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

ரூ.3100 கடன்.. பூண்டு வியாபாரியை நிர்வாணமாக ஓட வைத்த கும்பல்.. உ.பி-யில் தொடரும் அவலம் - காங். கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் நொய்டாவில் உள்ள மைன்பூரி என்ற பகுதியில் வசித்து வருபவர் அமித் (35). இவர் சப்ஜி மண்டியில் செக்டார் 88 இல் வண்டியில் பூண்டு விற்று வருகிறார். பூண்டு வியாபாரம் செய்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வியாபாரத்துக்காக ஒருவரிடம் ரூ.5,600 கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை சிறிது நாளில் செலுத்தி விடுவதாக கூறிய அவர், செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் கடனை கொடுத்தவர் திரும்ப கேட்டுள்ளார்.

எனவே கடினப்பட்டு ரூ.2,500 அவரிடம் செலுத்திவிட்டு மீதம் ரூ.3,600 விரைவில் செலுத்தி விடுவதாக கூறியுள்ளார் வியாபாரி அமித். ஆனால் அவரது பேச்சை கேட்காத கடன் கொடுத்த நபரோ அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் தனது நண்பர்கள் உதவியோடு வியாபாரி அமித்தை கடுமையான வார்த்தைகளால் பேசி, குச்சியை வைத்து அடித்து ஆடைகளை களைந்துள்ளார்.

ரூ.3100 கடன்.. பூண்டு வியாபாரியை நிர்வாணமாக ஓட வைத்த கும்பல்.. உ.பி-யில் தொடரும் அவலம் - காங். கண்டனம்!

பின்னர் அந்த வியாபாரியை சாலையில் நிர்வாணமாக ஓட சொல்லி வற்புறுத்தி தாக்கியுள்ளனர். தொடர்ந்து இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவம் குறித்த செய்தி தெரியவந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளி சுந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர் பகந்தாஸ் சிங் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை உத்தர பிரதேச காங்கிரஸ், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories