இந்தியா

3 வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்த காதலர்கள்.. காதலியை அடித்து கொன்ற காதலன்: விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

பெங்களூருவில் காதலியை குக்கர் மூடியால் அடித்துக்கொலை செய்த காதலனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

3 வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்த காதலர்கள்.. காதலியை அடித்து கொன்ற காதலன்: விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வைஷ்ணவ் மற்றும் தேவி. இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் காதலி மீது வைஷ்ணவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தது. அப்படி நேற்றும் இதே போல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆவேசமடைந்த வைஷ்ணவ் வீட்டுச் சமையல் அறையிலிருந்த குக்கர் மூடியை எடுத்துக் காதலி தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

3 வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்த காதலர்கள்.. காதலியை அடித்து கொன்ற காதலன்: விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

பின்னர் அங்கிருந்து வைஷ்ணவ் தப்பிச் சென்றுள்ளார். இது பற்றி போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் தேவி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் தப்பிச் சென்ற வைஷ்ணவை தேடிவந்தனர். இதையடுத்து அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் தலைமறைவாக இருந்த இடத்தை போலிஸார் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 வருடம் ஒன்றாக வசித்து வந்த காதலியை காதலனே சந்தேகத்தில் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories