இந்தியா

அதிர்ச்சி வீடியோ.. இளம் பெண்ணை கடித்து ஆற்றுக்கு இழுத்துச் சென்ற முதலை: உறைந்து நின்ற மக்கள்!

ஒடிசாவில் இளம் பெண் ஒருவரை முதலை கடித்து ஆற்றுக்குள் இழுத்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

அதிர்ச்சி வீடியோ.. இளம் பெண்ணை கடித்து ஆற்றுக்கு இழுத்துச் சென்ற முதலை: உறைந்து நின்ற மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பலட்பூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஆற்றில் துணிகளைத் துவைத்து விட்டுக் குளித்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வந்த முதலை ஒன்று அப்பெண்ணைக் கடித்துள்ளது. அவர் முதலையிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். இருப்பினும் முதலை அவரை கடித்து அப்படியே ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது.

இந்த கொடூர காட்சியைப் பார்த்த மக்கள் அந்த பெண்ணுக்கு எந்தவிதமான உதவியும் செய்ய முடியாமல் அப்படியே உறைந்து நின்றனர். அங்கிருந்த சிலர் இளம் பெண்ணை முதலை விழுங்கும் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories