இந்தியா

டெலிகிராம் காதலுக்கு எதிர்ப்பு.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவால் அதிர்ந்துபோன குடும்பம்.. - நடந்தது என்ன?

டெலிகிராம் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் மொபைல் போனையும் பிடிங்கி வைத்து கொண்டதால் மனமுடைந்த பெண், மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகிராம் காதலுக்கு எதிர்ப்பு.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவால் அதிர்ந்துபோன குடும்பம்.. - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ., படித்து வரும் இவர், சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது டெலிகிராம் மூலம் இந்த இளம்பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

23 வயதுடைய அந்த இளைஞர் மேற்கு உத்தர பிரதேசதத்திலுள்ள படான் என்ற பகுதியை சேர்ந்தவர். இருவரும் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த நிலையில், தங்கள் உறவை அடுத்த கட்டமாக காதலுக்கு கொண்டு சென்றனர். இருவரும் சில மாத காலமாகவே காதலித்து வந்த நிலையில், இந்த இளம்பெண் மொபைல் போனை மேலும் அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார்.

டெலிகிராம் காதலுக்கு எதிர்ப்பு.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவால் அதிர்ந்துபோன குடும்பம்.. - நடந்தது என்ன?

இதனால் சந்தேகடைந்த அவரது பெற்றோர் மொபைல் போனை வாங்கி சோதனை செய்துள்ளனர். அப்போது இந்த இளம்பெண் காதலித்து வருவது தெரியவந்தது. தொடர்ந்து அவரை பெற்றோர் அந்த இளம்பெண்ணை கண்டித்து மொபைல் போனை பறித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் தனது வீட்டின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

மாடியில் இருந்து கீழே விழுந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், போலீசுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இளம்பெண் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

அப்போது இந்த சம்பவம் தெரியவந்தது. எனினும் இளம்பெண் கண்விழித்த பின் அவரிடம் பெறப்படும் வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் விசாரிக்கவுள்ளனர். டெலிகிராம் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் மொபைல் போனையும் பிடிங்கி வைத்து கொண்டதால் மனமுடைந்த இளம்பெண், மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகிராம் காதலுக்கு எதிர்ப்பு.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவால் அதிர்ந்துபோன குடும்பம்.. - நடந்தது என்ன?

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

banner

Related Stories

Related Stories