இந்தியா

நிர்வாணமாக்கித் தாக்குதல்.. பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் தொடரும் மனிதாபிமானமற்ற செயல்கள்!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவரை நிர்வாணப்படுத்தி கும்பல் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாணமாக்கித் தாக்குதல்.. பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் தொடரும் மனிதாபிமானமற்ற செயல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சியில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக மனிதாபிமானமற்ற செயல்கள் நடந்து வருவது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அண்மையில் பா.ஜ.க கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளரான பிரவேஷ் சுக்லா என்பவர் மது போதையில் மனநலம் பாதிக்கப்பட்ட பட்டியலின சமூக சிறுவன் மீது சிறுநீர் கழித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

நிர்வாணமாக்கித் தாக்குதல்.. பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் தொடரும் மனிதாபிமானமற்ற செயல்கள்!

இந்த வீடியோ வைரலானதை அடுத்து பிரவேஷ் சுக்லாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் வேறுவழி இன்றி மத்தியப் பிரதேச போலிஸார் அவரை கைது செய்தனர்.

இந்த கொடூர சம்பவம் நடந்த சில நாட்களிலேயே பட்டியல் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களை மலம் திங்கவைத்த கொடூர சம்பவம் நடந்தது.

தற்போது, திருடியதாகச் சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரைச் சிலர் நிர்வாணமாக்கி கொடூர ஆயுதங்களால் தாக்கும் வீடியோ வெளியாகி பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், திருடியதாகக் கருதப்பட்டு அந்த நபரைச் சிலர் நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் மனிதாபிமானமற்ற செயல்கள் நடந்து வருவது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories