இந்தியா

திருமணத்தில் புகைப்பிடித்து நடனமாடிய மாமியார்.. அதிர்ச்சியில் மணமகன் எடுத்த முடிவு: சோகத்தில் மணமகள்!

உத்தர பிரதேசத்தில் மாமியார் புகைப் பிடித்ததால் மணமகன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

திருமணத்தில் புகைப்பிடித்து நடனமாடிய மாமியார்.. அதிர்ச்சியில் மணமகன் எடுத்த முடிவு: சோகத்தில் மணமகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபருக்கு ராஜ்புராவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதன்படி ஜூன் 27ம் தேதி திருமணத்திற்கான முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.

அப்போது மணமகன் வீட்டாரைப் பெண் வீட்டார் உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் ஆட்டம் பாட்டத்துடன் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அந்நேரம் மணமகளின் தாயார் புகைப்பிடித்த படியே நடனமாடியுள்ளார்.

திருமணத்தில் புகைப்பிடித்து நடனமாடிய மாமியார்.. அதிர்ச்சியில் மணமகன் எடுத்த முடிவு: சோகத்தில் மணமகள்!

மேலும் புகையை நடனமாடிக் கொண்டிருந்தவர்களின் முகத்தில் ஊதியுள்ளார். இதைப்பார்த்து மணமகனின் வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உடனே மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் திருமணம் நின்றதை அடுத்து திருமணத்திற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

banner

Related Stories

Related Stories