இந்தியா

மணிப்பூர் வன்முறை.. ”இந்திய தேசத்தில் ஆழமாக ஏற்பட்டுள்ள காயம்” : சோனியா காந்தி வேதனை!

மணிப்பூர் வன்முறை சம்பவம் இந்திய தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது என சோனியா காந்தி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் வன்முறை.. ”இந்திய தேசத்தில் ஆழமாக ஏற்பட்டுள்ள காயம்” : சோனியா காந்தி வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துள்ளது.

இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.

இந்த வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமும், பா.ஜ.க அரசியலும்தான் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. வன்முறையால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணிப்பூர் மக்கள் மிசோரம், அசாம் மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மணிப்பூர் வன்முறை சம்பவம் இந்திய தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது என சோனியா காந்தி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வீடியோ ஒன்றில் பேசிய சோனியா காந்தி, மணிப்பூரின் அன்பான சகோதர சகோதரிகளே, ஏறக்குறைய 50 நாட்களாக, ஒரு மாபெரும் மனித அவலம் அரங்கேறுவதை நாம் கண்டு வருகிறோம். இந்த வன்முறை சம்பவம் நமது தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் வன்முறை.. ”இந்திய தேசத்தில் ஆழமாக ஏற்பட்டுள்ள காயம்” : சோனியா காந்தி வேதனை!

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தாங்கள் வீடு என்று அழைக்கும் ஒரே இடத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் கட்டிய அனைத்தையும் விட்டு விட்டு செல்வதை கண்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

அமைதியான முறையில் வாழ்ந்த நம் சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போராடுவதைப் பார்க்கும்போது மனம் உடைகிறது. இந்த அழகிய நிலத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வர வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தாயாக உங்கள் வலியை நான் புரிந்துகொள்கிறேன். உங்கள் மனசாட்சியை நல்ல வழில் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இனி வரக்கூடிய நாட்களை நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நீண்ட பயணத்தை நாம் மேற்கொள்கிறோம். இந்த சோதனையிலிருந்து வலுவாக வெளிவருவோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories