இந்தியா

பைக் மீது மோதிய கார்.. 100 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட உணவு டெலிவரி பாய் உடல்: அதிர்ச்சி சம்பவம்!

கர்நாடகாவில் கார் மோதியதில் உணவு டெலிவரி வேலை செய்து வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பைக் மீது மோதிய கார்.. 100 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட உணவு டெலிவரி பாய் உடல்: அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்திற்குட்பட்ட எச். டி.கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பவன் குமார். இளைஞரான இவர் பெங்களூருவில் உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் உணவு ஒன்றை டெலிவரி செய்வதற்காகப் பவன் குமார் ராஜ ராஜேஸ்வரி நகர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்குப் பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று அவரது வாகனத்தின் மீது மோதியது.

பைக் மீது மோதிய கார்.. 100 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட உணவு டெலிவரி பாய் உடல்: அதிர்ச்சி சம்பவம்!

இதில் அவர் 100 மீட்டர் தூரம் அவரை இழுத்துச் செல்லப்பட்டு, உடல் சிதலமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் பவன் குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர் விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்களைப் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்தனர். இவர்களிடம் இருந்து மீட்டு போலிஸார் அவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

இதில், காரை ஓட்டிவந்தது விநாயக் என்று தெரியவந்தது. மேலும் நேற்று இரவு 3 பெண் தோழிகள் உட்பட 5 பேர் ஒன்றாக மது குடித்துள்ளனர். பின்னர் தோழி ஒருவரை வீட்டில் விடுவதற்காக விநாயக் அவரை வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது பவன் குமார் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories