இந்தியா

போனை பிடிங்கிய கணவர்.. ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி !

பக்கத்து வீட்டுகார இளைஞருடன் போனில் பேசியதாக கூறி செல்போனை பிடிங்கி வைத்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ள மனைவியின் செயல் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போனை பிடிங்கிய கணவர்.. ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை அடுத்துள்ளது மாதவி நகர். இங்கு சுனில் தாஹத் என்ற 32 வயது நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாவனா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. இந்த சூழலில் திருமணம் முடிந்த கையேடு இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

அப்போது திடீரென பாவனாவுக்கு பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் போனில் நீண்ட நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டு பெண் ஒருவர் சுனிலிடம் வந்து, நீங்கள் வேலைக்கு சென்றதும் தங்கள் மனைவி பாவனா, தனது கணவரிடம் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

போனை பிடிங்கிய கணவர்.. ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி !

இதனை கேட்டு அதிர்ந்த சுனில், அவரது மனைவியிடம் கேட்டுள்ளார். மேலும் இது போல் இனி போனில் பேசக்கூடாது என்று கண்டித்தும் உள்ளார். இருப்பினும் இதனை பாவனா கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சுனில் திடீரென வீட்டுக்கு வந்தபோது, பாவனா அந்த இளைஞருடன் பேசியுள்ளார். இதனால் அவரை திட்டியுள்ளார்.

தொடர்ந்து அவரை கண்டித்தும் அவர் போனில் பேசிக்கொண்டே இருந்தால் ஆத்திரமடைந்த கணவர், பாவனாவின் போனை பிடிங்கி சென்றுள்ளார். அவர் திரும்ப கேட்டும் கணவர் மறுத்துள்ளார். இதனால் மனைவி மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் இரவு நேரத்தில் கணவர் நன்றாக அசந்து தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு சுமார் 2 மணியளவில், அடுப்பாங்கறை சென்ற மனைவி எண்ணெய்யை சூடாக்கியுள்ளார். பின்னர் அதனை எடுத்து வந்து கணவர் மீது ஊற்றியுள்ளார். இதில் அவரது அந்தரங்க உறுப்புகள் உட்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சூடான எண்ணெய்யை ஊற்றிவிட்டு பாவனா அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

போனை பிடிங்கிய கணவர்.. ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி !

இதில் அலறி துடித்த சுனிலின் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 70% தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மனைவி பாவனவை தேடி வருகின்றனர்.

பக்கத்து வீட்டுகார இளைஞருடன் போனில் பேசியதாக கூறி செல்போனை பிடிங்கி வைத்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ள மனைவியின் செயல் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories