இந்தியா

கால்வாயில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்.. திறந்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: பகீர் சம்பவம்!

கேரளாவில் உணவக உரிமையாளர் கொலை செய்து உடலை சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கால்வாயில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்.. திறந்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்திக். இவர் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இவர் காணவில்லை.இதனால் இவரது மகன் நவ்ஷத், தனது தந்தை இரண்டு நாட்களாகக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் அட்டப்பாடி என்ற பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் சூட்கேஸ் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸார் அங்குச் சென்று சூட்கேஸை திறந்து பார்த்தனர்.

கால்வாயில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்.. திறந்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: பகீர் சம்பவம்!

அப்போது அந்த சூட்கேஸிற்குள் சடலம் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு அந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். பின்னர் சூட்கேஸில் இருந்த சடலம் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதில் காணாமல் போன சித்திக் என்பது தெரியவந்தது. இதையடுத்து இவரை யார் கொலை செய்தது, உடலை சூட்கேஸில் அடைத்து வீசியது என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இவரது உணவகத்தில் வேலை பார்த்து வரும் ஷிபிலி மற்றும் பர்ஹானா ஆகிய இருவர் தான் சித்திக்கை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories