இந்தியா

குழந்தைகள் கணவரோடு தற்கொலை செய்துகொண்ட பெண்.. திருமணமாகி 8 நாட்களில் சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !

திருமணமாகி 8 நாட்களிலேயே குழந்தைகள் கணவரோடு பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் கணவரோடு தற்கொலை செய்துகொண்ட பெண்.. திருமணமாகி 8 நாட்களில் சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை அடுத்துள்ளது வச்சல் என்ற கிராமம். இங்கு ஸ்ரீஜா என்ற 38 பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் கூலி தொழில் செய்து வரும் சுனில் குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. இந்த தம்பதிக்குள் சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) ஆகிய 3 குழந்தைகள் இறுகின்றனர்.

ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், சுனில் குமாருக்கும் ஸ்ரீஜாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழலில் ஸ்ரீஜாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த ஷாஜி (42) என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. ஷாஜிக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள், மனைவி இருக்கும் நிலையில், ஸ்ரீஜாவும் ஷாஜியும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

குழந்தைகள் கணவரோடு தற்கொலை செய்துகொண்ட பெண்.. திருமணமாகி 8 நாட்களில் சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே, தனது கணவரை விட்டு ஷாஜியுடன் வாழ எண்ணியுள்ளார் ஸ்ரீஜா. இதனால் இருவரும் திருமணம் செய்ய எண்ணி, அதன்படி கடந்த 16-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஸ்ரீஜாவின் 3 பிள்ளைகளையும் கூட்டி தனது இரண்டாவது கணவர் ஷாஜியுடன் வாழ தொடங்கியுள்ளார்.

இதனிடையே ஸ்ரீஜா, ஷாஜியுடன் சேர்ந்து தன்னை வீட்டை விட்டு துரத்தியதாக அவரது முதல் கணவர் சுனில் குமார் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் ஸ்ரீஜாவையும், சுனில் குமாரையும் சமரசம் பேச காவல்நிலையம் அழைத்தனர். ஆனால் ஸ்ரீஜாவோ நேற்று காலை சுமார் 6.30 மணி அளவில் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் கணவரோடு தற்கொலை செய்துகொண்ட பெண்.. திருமணமாகி 8 நாட்களில் சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !

இதனை கேட்டு பதற்றமடைந்த காவல்துறை அதிகாரிகள் விரைந்து ஸ்ரீஜா வீட்டுக்கு சென்றனர். அங்கே அவரது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. இதையடுத்து அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது து ஸ்ரீஜா, ஷாஜியுடன் சேர்ந்து 3 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனை கண்டதும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

குழந்தைகள் கணவரோடு தற்கொலை செய்துகொண்ட பெண்.. திருமணமாகி 8 நாட்களில் சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !

மேலும் 3 குழந்தைகளின் சடலம் ஹாலிலும், ஸ்ரீஜா, ஷாஜியின் சடலம் படுக்கையறையிலும் கிடந்துள்ளது. இதையடுத்து 5 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளை கொன்று விட்டு பின்னர் தாயும் கணவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

எனினும் இதுகுறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இரண்டாவது திருமணமாகி 8 நாட்களிலேயே குழந்தைகள் கணவரோடு பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் கணவரோடு தற்கொலை செய்துகொண்ட பெண்.. திருமணமாகி 8 நாட்களில் சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

banner

Related Stories

Related Stories