சினிமா

‘இசை உலகின் மகுடம் எஸ்.ஜானகி காலமானார்.. 17 மொழிகள்.. 40,000+ பாடல்கள்.. காலத்தால் அழியாத குரல்’

தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (88) உடல்நலக் குறைவால் இன்று (ஜூலை 11) மைசூரில் காலமானார்.

‘இசை உலகின் மகுடம் எஸ்.ஜானகி காலமானார்.. 17 மொழிகள்.. 40,000+ பாடல்கள்.. காலத்தால் அழியாத குரல்’
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி இன்று(ஜூலை 11) வயது முதிர்வு காரணமான உடல்நலக் குறைவு காரணமாக மைசூரில் காலமானார். அவருக்கு 88 வயது. அவரது மறைவு தென்னிந்தியத் திரையுலகிற்கும், இந்திய இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பிறந்த ஜானகி, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீண்ட இசைப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இசை ரசிகர்களின் இதயங்களில் அழியாத இடத்தைப் பெற்றார்.

அவரது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் தனித்துவமான பாடும் பாணி மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை குரலில் பிரதிபலிக்கும் திறன் அவரை மற்ற பாடகர்களிடமிருந்து தனித்து நிறுத்தியது.

‘இசை உலகின் மகுடம் எஸ்.ஜானகி காலமானார்.. 17 மொழிகள்.. 40,000+ பாடல்கள்.. காலத்தால் அழியாத குரல்’

இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து எண்ணற்ற காலத்தால் அழியாத பாடல்களை அவர் வழங்கியுள்ளார். தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்ற அவர், தென்னிந்திய இசை உலகின் ‘இசைக் குயில்’ என்ற பெருமையுடன் போற்றப்பட்டார்.

எஸ். ஜானகி பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டி தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவாக இருந்தாலும், அவரது இசை என்றென்றும் ரசிகர்களின் மனங்களில் நிலைத்திருக்கும் என ரசிகர்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories