இந்தியா

கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு.. இன்றே இணையத்தில் ட்ரெண்டாகும் #ByeByeBJP!

கர்நாடகாவின் சட்டமன்ற தேர்தல் நாளை நடக்கவிருக்கும் நிலையில், பா.ஜ.கவுக்கு எதிராக #ByeByeBJP ட்விட்டர் ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு.. இன்றே இணையத்தில் ட்ரெண்டாகும் #ByeByeBJP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவு மே 13ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு இருந்தே காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபடத் துவங்கினர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறியதால் பா.ஜ.கவினர் பீதியடைந்தனர். மேலும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் பா.ஜ.கவினர் பலர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடி ஏழு நாட்கள் கர்நாடகாவில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். அதேபோல் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா என பலரும் வாக்கு சேகரித்தனர்.

கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு.. இன்றே இணையத்தில் ட்ரெண்டாகும் #ByeByeBJP!

இருப்பினும் பா.ஜ.க ஆட்சி மீது மக்கள் கடும் கோவத்தில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் எல்லாத்துறையிலும் ஊழல் நடந்துள்ளது. மேலும் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பா.ஜ.க ஆட்சியின் 40% ஊழல் ஆட்சி என்பதைதான் முக்கிய ஆயுதமாக எடுத்தனர்.

மேலும் இந்த தேர்தலில் பா.ஜ.கவின் நடவடிக்கை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாகப் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தை வெட்கம்.. எப்போதும் பொய்களுக்கான மேடை அமைக்கப்படுகிறது" என சாடியிருந்தார். இப்படி பலரும் பா.ஜ.கவை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவின் சட்டமன்ற தேர்தல் நாளை நடக்கவிருக்கும் வேலையில் பா.ஜ.கவுக்கு எதிராக #ByeByeBJPஎன்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் ’40% கமிஷன் அரசாங்கத்துக்கு ஓட்டு இல்லை’ என்ற பதாகை ஏந்தி பா.ஜ.கவுக்கு எதிராக இணையத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories