இந்தியா

’நகையை கழற்றி கொடு’.. துப்பாக்கியைக் காட்டி பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்: டெல்லியில் பயங்கரம்!

டெல்லியில் துப்பாக்கியைக் காட்டி பெண்ணிடம் வாலிபர் ஒருவர் நகைப் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’நகையை கழற்றி கொடு’.. துப்பாக்கியைக் காட்டி பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்: டெல்லியில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்மை நாட்களாகவே தலைநகர் டெல்லியில் குற்ற சம்பவம் அதிகரித்துள்ளது. குறிப்பாகக் கொலை சம்பவம் அதிகம் நடந்து வருகிறது. அதேபோல் பெண்கள் மீதான தாக்குதலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் துப்பாக்கியைக் காட்டி பெண்ணிடம் முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி நகைப் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் சாலையில் நடந்து செல்லும் பெண்ணின் கழுத்திலிருந்த நகை பறிக்க முயன்றனர். அப்போது அவர் வாலிபர்களிடம் இருந்து தப்பித்து எதிரே இருக்கும் கடையின் வாசலில் கீழே விழுகிறார்.

அப்போது கடையிலிருந்த ஒருவர் அவரை காப்பாற்ற வந்த போது முகமூடி அணிந்த வாலிபர் துப்பாக்கியைக் காட்டி அவரை மிரட்டுகிறார். உடனே அந்த வாலிபர் பயந்து மீண்டும் கடைக்குள் சென்று ஓடுகிறார். பிறகு அந்த பெண்ணின் நகை பறிக்கும் காட்சிப் பதிவாகியுள்ளது.

’நகையை கழற்றி கொடு’.. துப்பாக்கியைக் காட்டி பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்: டெல்லியில் பயங்கரம்!

இந்த சம்பவம் டெல்லியில் உள்ள ரோகிணி நகரில் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து துப்பாக்கி காட்டி பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களைத் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories