இந்தியா

மும்பை : மலை பகுதியில் சந்தித்த காதலர்கள்.. காதலரை நிர்வாணப்படுத்தி காதலியை வன்கொடுமை செய்த கும்பல் !

காதலரை நிர்வாணப்படுத்தி அவரின் காதலியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

மும்பை : மலை பகுதியில் சந்தித்த காதலர்கள்.. காதலரை நிர்வாணப்படுத்தி காதலியை வன்கொடுமை செய்த கும்பல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மும்பை அருகிலுள்ள விரார் என்னும் மலைப்பகுதி பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். இங்கு ஒரு காதல் ஜோடி சென்று அங்குள்ள ஒதுக்குபுறமான இடத்தில அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இரு இளைஞர்கள் அந்த காதல் ஜோடியை பிடித்து புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளனர்.

மேலும், வெளியிடக்கூடாது என்றால் பணம் தரவேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த காதல் ஜோடி தங்களிடம் போதிய பணம் இல்லாதால் தங்கள் நண்பர்களிடம் பணம் கேட்டு போன் செய்துள்ளனர். ஆனால் அதற்கும் அந்த இளைஞர்கள் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர்.

மும்பை : மலை பகுதியில் சந்தித்த காதலர்கள்.. காதலரை நிர்வாணப்படுத்தி காதலியை வன்கொடுமை செய்த கும்பல் !

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் காதலர் அங்கிருந்த உடைந்த பீர் பாட்டிலால் அந்த இளைஞர்களில் ஒருவரை அடித்துள்ளார். அதன்பின்னர் அந்த இருவரும் அந்த இளைஞரை நிர்வாணப்படுத்தி ஒரு மரத்தில் கட்டிவைத்துள்ளனர். மேலும் அந்த பெண்ணை வேறு இடத்துக்கு கடத்தி சென்றுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த மரத்தில் இருந்த தப்பித்த காதலர் அந்த பகுதியில் தனது காதலியை தேடிய நிலையில், அவர் கிடைக்காததால் நிர்வாண நிலையில் அங்கிருந்த சாலைக்கு சென்று உதவி கேட்டுள்ளார். சிலர் அவரை கடந்து சென்றநிலையில் ஒருவர் மட்டும் தனது போனை அவரிடம் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் காவல்நிலையத்துக்கு இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

மும்பை : மலை பகுதியில் சந்தித்த காதலர்கள்.. காதலரை நிர்வாணப்படுத்தி காதலியை வன்கொடுமை செய்த கும்பல் !

பின்னர் அங்கு வந்த போலிஸார் அந்த இளைஞருக்கு உடையை அளித்து காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று நடந்ததை கூறுமாறு கூறியுள்ளனர். அதன்படி அவர் கூறிய தகவலின் அடிப்படையில் தலையால் காயம் அடைந்து யாரும் மருத்துவமனைக்கு வந்துள்ளார்களா என போலிஸார் விசாரித்துள்ளனர்.

அதன்படி ஒருவர் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவரின் புகைப்படத்தை பெற்று அந்த காதலரிடம் காட்டி அவர்தான் குற்றவாளி என்பதை போலிஸார் உறுதிசெய்தனர். அதனைத் தொடர்ந்து அந்த புகைப்படத்தின் அடிப்படையில் அந்த குற்றத்தில் ஈடுபட தீரஜ் ராஜே (25), லட்சுமண் ஷிண்டே (22) ஆகியோரை போலிஸார் கைது செய்தனர்.

மும்பை : மலை பகுதியில் சந்தித்த காதலர்கள்.. காதலரை நிர்வாணப்படுத்தி காதலியை வன்கொடுமை செய்த கும்பல் !

மேலும் அந்த பெண் வீட்டுக்கு வந்துவிட்டார் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த பெண்ணிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், என்னை கடத்திய இரண்டு பேரும் ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து என்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்றும், என் போனை பறித்து பேக்கை தீ வைத்து எரித்துஎன்னைக் காட்டுக்குள் விட்டுச் சென்றுவிட்டனர் என்றும் கூறியுள்ளார். மேலும் அதன் பின்னர் தான் வீட்டுக்கு வந்ததையும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories