இந்தியா

நண்பன் திருமணத்திற்கு வந்த வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்.. உறவினர்கள் அதிர்ச்சி!

மத்திய பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பன் திருமணத்திற்கு வந்த வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்.. உறவினர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அபய் சச்சன். இவர் தனது நண்பர் திருமணத்தில் பங்கேற்பதற்காக கான்பூரில் உள்ள ரேவா பகுதிக்கு வந்துள்ளார். அப்போது திருமண ஊர்வலத்தின் போது இளைஞர்கள் பலரும் பாட்டுப்பாடி நடனமாடி உற்சாகமாக இருந்தனர். இதில் அபய் சச்சனும் பங்கேற்று அவர்களுடன் சேர்ந்து நடனமாடினார்.

நண்பன் திருமணத்திற்கு வந்த வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்.. உறவினர்கள் அதிர்ச்சி!

பின்னர் சிறிது நேரத்திலேயே நடனமாடிக் கொண்டிருந்த அபய் சச்சன் திடீரென கீழே விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனே அவரை தூக்கிக் கொண்டு அருகே இருந்த காந்தி நினைவு மருத்துவமனைக்குச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு அபய் சச்சன் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

நண்பன் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தொடர்ச்சியாகவே நடனமாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு வாலிபர்கள் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories