இந்தியா

“இந்த இருமல் மருந்துகளை சாப்பிடாதீர்கள்..” -எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதர அமைப்பு: இந்தியா அதிர்ச்சி !

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“இந்த இருமல் மருந்துகளை சாப்பிடாதீர்கள்..” -எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதர அமைப்பு: இந்தியா அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த அக்டோபர் மாதம் அரியானா மாநிலம், சோனிபட் மெய்டன் மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மருந்தை உட்கொண்ட மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். இதையடுத்து சோதனை செய்ததில் அதில் மாசு இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள 'மேரியன் பயோடெக்' நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தான டாக் 1 மேக்ஸ் என்ற மருந்தைக் குடித்ததால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்தது.

“இந்த இருமல் மருந்துகளை சாப்பிடாதீர்கள்..” -எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதர அமைப்பு: இந்தியா அதிர்ச்சி !

உலகளவில் இது பெரிய அதிர்வலையை நிலையில், இது குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டாக் 1 மேக்ஸ் இருமல் மருந்தைக் குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து அந்த மருத்தை ஆய்வு செய்தபோது அதில் எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.

அதேபோல் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சில நாட்களுக்கு வீட்டிலிருந்தபோது 2.5 முதல் 5 மில்லி அளவுக்கு டாக் 1 மேக்ஸ் இருமல் மருந்தை குடித்துள்ளனர். இது அளவை மீறியதாகும்.

“இந்த இருமல் மருந்துகளை சாப்பிடாதீர்கள்..” -எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதர அமைப்பு: இந்தியா அதிர்ச்சி !

18 குழந்தைகள் மரணத்திற்குப் பிறகு நாட்டில் அனைத்து மருந்தகங்களில் இருந்தும் டாக் 1 மேக்ஸ் மருந்துகள் மற்றும் சிரப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த மருந்தை ஆய்வு சரியாகச் செய்யாத 7 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

“இந்த இருமல் மருந்துகளை சாப்பிடாதீர்கள்..” -எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதர அமைப்பு: இந்தியா அதிர்ச்சி !

இதனைத் தொடர்ந்து, 'மேரியன் பயோடெக்' நிறுவனம் தயாரிக்கும் 'டோக்-1 மேக்ஸ்' மற்றும் 'அம்ப்ரோனால்' என்ற இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழு பரிசோதித்தது.

அப்போது அதில் எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த இரண்டு இருமல் மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என WHO என்று சொல்லப்படும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories