இந்தியா

மனைவிக்கு HIV ரத்தத்தை செலுத்திய கணவர்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்.. ஆந்திராவில் பரபரப்பு !

மனைவிக்கு HIV பாதிக்கப்பட்ட ரத்தத்தை செலுத்திய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவிக்கு HIV ரத்தத்தை செலுத்திய கணவர்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்.. ஆந்திராவில் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆந்திரா மாநிலம், விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் சரண் (வயது 40). இவர் மனைவி, மகளுடன் வசித்து வரும் நிலையில், கடந்த 2018-ம் ஆண்டுமுதல் இவருக்கும் இவரது மனைவிக்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது. அதோடு ஆண் குழந்தை வேண்டும் என்றும் வரதட்சனை பணம் கேட்டும் இவர் மனைவியை தாக்கி வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இவருக்கு விசாகப்பட்டணத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை இவர் திருமணம் செய்ய விரும்பிய நிலையில், இவரது மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். மனைவியை விவாகரத்து செய்ய இவர் காரணம் தேடிய நிலையில், விபரீதமான யோசனை இவருக்கு வந்துள்ளது.

மனைவிக்கு HIV ரத்தத்தை செலுத்திய கணவர்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்.. ஆந்திராவில் பரபரப்பு !

அதன்படி மனைவிக்கு பரிசோதனை செய்யவேண்டும் என்று ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்று அங்கு HIV-யால் பாதிக்கப்பட்ட ரத்தத்தை மனைவிக்கு செலுத்தியுள்ளார். இந்த சம்பவம் மனைவிக்கு உண்மையில் நடந்த ரத்த பரிசோதனையின்போது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி தனது கணவரின் செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், னக்கும் என் குழந்தையின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திய என் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மனைவிக்கு HIV ரத்தத்தை செலுத்திய கணவர்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்.. ஆந்திராவில் பரபரப்பு !

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் சரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories