இந்தியா

FB-யில் கீர்த்தி சுரேஷ் போட்டோ.. கல்லூரி மாணவிபோல் பேசி காதல் வலை வீசி 40 லட்சம் அபேஸ் செய்த பெண்..

கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை முகநூல் DP-யாக வைத்து காதல் வலை வீசி 40 லட்சம் பணம் பறித்த இரண்டு குழந்தைகளின் தாயின் செயல் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

FB-யில் கீர்த்தி சுரேஷ் போட்டோ.. கல்லூரி மாணவிபோல் பேசி காதல் வலை வீசி 40 லட்சம் அபேஸ் செய்த பெண்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்த உலகம் டிஜிட்டல் வண்ணமாக மாறியதில் இருந்தே பலரும் டிஜிட்டல் செயலிகளை வைத்தே ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில் பிரபலங்கள் புகைப்படத்தை வைத்து சில ஆண்களும், பெண்களும் ஏமாற்று வேலையில் இறங்கியுள்ளனர். அதிலும் திரைபிரபலங்கள் புகைப்படத்தை பயன்படுத்தியே இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது.

அதே போன்றொரு சம்பவம் தான் கர்நாடகாவில் தற்போது அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் முகநூல் பக்கத்தில் ஐடி உருவாக்கி அதில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை எடிட் செய்து தனது டிபியாக வைத்துள்ளார். மேலும் பல ஆண்களுக்கு Friend Request அனுப்பியுள்ளார்.

FB-யில் கீர்த்தி சுரேஷ் போட்டோ.. கல்லூரி மாணவிபோல் பேசி காதல் வலை வீசி 40 லட்சம் அபேஸ் செய்த பெண்..

அதில் விஜயபூர் பகுதியை சேர்ந்த பரசுரமா என்பவருடன் பேசி வந்துள்ளார். அவரிடம் தான் கல்லூரி படிக்கும் மாணவி என்று பேச்சு கொடுத்து வந்துள்ளார். மேலும் இந்த பழக்கத்தால் இருவரும் தங்கள் வாட்சப் எண்களை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து வாட்ஸப்பில் பேசத்தொடங்கிய இவர்கள் நெருங்கிய நண்பர்களாக மாறியுள்ளனர்.

ஒரு நாள் மஞ்சுளா பரசுரமிடம் தான் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனையும் நம்பிய பரசுரமா, அவரது காதலை ஏற்றுக்கொண்டு அடிக்கடி அவருக்கு gift அனுப்பி வைத்துள்ளார். அதோடு இவர் தனது படிப்புக்கு பணமில்லை என்று கேட்டு அவரிடம் பணமும் கேட்டுள்ளார். இவர்களது பழக்கம் இப்படியே போக, ஒரு முறை பரசுரமா நிர்வாணமாக குளிக்கும் வீடியோ வேண்டும் என்று அவரிடம் மஞ்சுளா கேட்டுள்ளார்.

FB-யில் கீர்த்தி சுரேஷ் போட்டோ.. கல்லூரி மாணவிபோல் பேசி காதல் வலை வீசி 40 லட்சம் அபேஸ் செய்த பெண்..

இவரும் உடனே அனுப்பியுள்ளார். அன்று தொடங்கியது இவருக்கு ஏழரை.. ஏனெனில் மஞ்சுளா அந்த வீடியோவை வைத்து இவரிடம் லட்ச கணக்கில் பணம் கேட்டுள்ளார். முதலில் கொடுக்க மாட்டேன் என்று மறுத்த பரசுரமா, பிறகு கொடுத்து வந்துள்ளார். இப்படியே 40 லட்சம் வரை கொடுத்து வந்த பரசுரமா ஒரு நாள் கடும் கோபத்தில் இருந்தார்.

அப்போது இதற்கு மேலும் பணம் கொடுக்க வேண்டாம் என எண்ணிய பரசுரமா, இது குறித்து உடனே காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண்ணை வீடு தேடி சென்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில், தனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாக கூறினார்.

FB-யில் கீர்த்தி சுரேஷ் போட்டோ.. கல்லூரி மாணவிபோல் பேசி காதல் வலை வீசி 40 லட்சம் அபேஸ் செய்த பெண்..

மேலும் , பரசுரமாவிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்ட பணத்தை வைத்து கார், பைக், 100 கிராம் தங்கம் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ள மஞ்சுளா, வீடு கட்டும் பணிகளையும் மேற்கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு இந்த மோசடியில் மஞ்சுளாவின் கணவரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது தலைமறைவாக உள்ள மஞ்சுளாவின் கணவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, மஞ்சுளா இதே போன்று வேறு யாரையும் மோசடி செய்து ஏமாற்றியுள்ளாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை முகநூல் DP-யாக வைத்து காதல் வலை வீசி 40 லட்சம் பணம் பறித்த இரண்டு குழந்தைகளின் தாயின் செயல் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories