இந்தியா

8,9ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்.. பாஜக ஆளும் கர்நாடகாவின் அவலம் !

8,9ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் ஆணுறைகள்,கருத்தடை சாதனங்கள் இருந்தது கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8,9ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்.. பாஜக ஆளும் கர்நாடகாவின் அவலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்துவருகிறது. இந்த மாநிலத்தின் தலைநகரான கர்நாடகாவில் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் பயலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்துவருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

இதன் காரணமாக, ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் கூட்டமைப்பான KAMS சார்பில் மாணவர்களின் பைகளை சோதனையிட பரிந்துரை வழங்கப்பட்டது. அதன்படி பல்வேறு பள்ளிகளில் மாணவர்களின் புத்தக பைகள் சோதனையிடப்பட்டது.

8,9ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்.. பாஜக ஆளும் கர்நாடகாவின் அவலம் !

அப்படி சோதனை நடத்தியதில் ஏராளமான மாணவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி 8,9ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் இருந்து ஆணுறைகள், கருத்தடை சாதனங்கள், சிகரெட் லைட்டர்கள், சிகரெட்டுகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோதனை குறித்து பேசிய KAMS பொதுச்செயலாளர் சஷி குமார், "சில மாணவிகளின் பைகளில் கருத்தடை சாதனங்கள் இருந்துள்ளது. தண்ணீர் பாட்டில்களில் மது கலந்து இருந்தது" என்று கூறி அதிரவைத்துள்ளார். இதனை தொடர்ந்து பள்ளிகளில் இது தொடர்பாக சிறப்பு பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

8,9ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்.. பாஜக ஆளும் கர்நாடகாவின் அவலம் !

அந்த கூட்டங்களில் மாணவர்களின் பைகளில் இருந்த பொருள்கள் பெற்றோரிடம் காட்டப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தின் சிக்கிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories