இந்தியா

அயன் பாக்ஸில் சூடு.. PVC பைப்பால் தாக்குதல்: கல்லூரி விடுதி அறையில் மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!

ஆந்திராவில் சக மாணவர்கள் சேர்ந்து கொண்டு மாணவர் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயன் பாக்ஸில் சூடு.. PVC பைப்பால் தாக்குதல்: கல்லூரி விடுதி அறையில் மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தில் உள்ளது எஸ்.ஆர்.கே.ஆர் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியில் அங்கித் என்ற மாணவர் விடுதியில் தங்கிப் படித்தி வருகிறார். இந்நிலையில் விடுதி அறையில் அங்கித்தை சில பேர் சேர்த்துக் கொண்டு கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், அங்கித் மன்னிப்பு கேட்கக் கேட்ட சிலர் அவரை கம்புகளைக் கொண்டு தாக்குகின்றனர். மேலும் அங்கிருந்த அயன் பாக்ஸ் எடுத்து அவருக்குச் சூடுவைப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

அயன் பாக்ஸில் சூடு.. PVC பைப்பால் தாக்குதல்: கல்லூரி விடுதி அறையில் மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!

இந்த வீடியோவை அடுத்து சங்கித்தை தாக்கிய 4 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த 4 பேரும் அதே கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சக மாணவர்கள் தாக்கியதில் அங்கித் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து போலிஸாரும், கல்லூரி நிர்வாகத்தினரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories