இந்தியா

குஜராத்தில் ஓர் அண்ணாமலை.. மக்களை காப்பாற்றுவதாக முட்டி அளவு தண்ணீரில் நீச்சலடித்து நாடகமாடிய BJP தலைவர்!

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்தபோது பா.ஜ.க தலைவர் மச்சு ஆற்றில் நீச்சலடித்து செல்லும் வீடியோ இணையத்தில் வரைலாகி வருகிறது.

குஜராத்தில் ஓர் அண்ணாமலை.. மக்களை காப்பாற்றுவதாக முட்டி அளவு தண்ணீரில் நீச்சலடித்து நாடகமாடிய BJP தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் 100 ஆண்டுகளுக்குப் பழமையானது. இந்த பாலம் பழுதடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் குஜராத் மாநிலத்தின் புத்தாண்டு தினமான கடந்த 26ம் தேதி திறக்கப்பட்டது.

இதையடுத்து அக்டோபர் 31ம் தேதி இரவு இந்த பாலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பாலத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென பாலம் இரண்டாக அறுந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதில்141 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குஜராத்தில் ஓர் அண்ணாமலை.. மக்களை காப்பாற்றுவதாக முட்டி அளவு தண்ணீரில் நீச்சலடித்து நாடகமாடிய BJP தலைவர்!

இந்த துயர விபத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் ஆளும் பா.ஜ.க அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாகக் குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக இந்த பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகத் திறத்தால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் இதுதான் குஜராத் மாடலின் லட்சணம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மோர்பியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை நேற்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆறுதல் கூறினார். இவர் வருகைக்காக மருத்துவமனை முழுவதும் புதிதாக புதிப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மோடி வருகைக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரின் அருகே குட்கா, சிகரெட் போன்றவை இருந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் பிரதமர் மோடி காயமடைந்தவர்களை சந்தித்து ஒரு விளம்பரத்திற்கான சந்திப்பு என்பது இதன் மூலம் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தொங்கு பாலம் அறுந்து விழுந்தபோது பா.ஜ.க தலைவரும், மோர்பி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான காந்திலால் அம்ருதிதா மக்களின் உயிரைக் காப்பாற்றுவதாக மச்சு ஆற்றில் நீச்சல் அடித்து நாடகமாடிய வீடியோ வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், முட்டி அளவு உள்ள தண்ணீரில் பொதுமக்கள் வரிசையாக நடந்து செல்கின்றனர். ஆனால் காந்திலால் அம்ருதிதா life preserver உதவியுடன் நீச்சலடித்து செல்கிறார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து மக்கள் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் போது உங்களுக்கு அப்போது கூட விளம்பரம் தேவைபடுகிறதா என விமர்சித்து வருகின்றனர்.

மேலும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முட்டி அளவு தேங்கியுள்ள தண்ணீரில் படகில் சென்று பார்வையிட்டு விளம்பரம் தேடியதை போன்று குஜராத்திலும் ஒரு அண்ணாமலை என இணைய வாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories