இந்தியா

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்.. 5 லிட்டர் ஆசிட்டை வீசிய இளம்பெண்.. அரியானாவில் அதிர்ச்சி !

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் மீது இளம்பெண் 5 லிட்டர் ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் அரியானாவில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்.. 5 லிட்டர் ஆசிட்டை வீசிய இளம்பெண்.. அரியானாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் மீது இளம்பெண் 5 லிட்டர் ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் அரியானாவில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் பஹதுர்கர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஷியாம் சிங். 25 வயதுடைய இளைஞரான இவருக்கு பெற்றோர் இல்லாத காரணத்தினால் தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்தார். இப்படி இருக்கையில் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அஞ்சலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்.. 5 லிட்டர் ஆசிட்டை வீசிய இளம்பெண்.. அரியானாவில் அதிர்ச்சி !

இவர்களது பழக்கத்தால் அஞ்சலி, ஷியாம் சிங்கை ஒரு தலையாக காதலிக்க தொடங்கியுள்ளார். இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசிக்கொள்வது, வெளியே செல்வது என்பதுமாக இருந்து வந்துள்ளனர். இதனால் காதலிக்க தொடங்கிய அஞ்சலி, தனது தாயுடன் ஷியாம் அத்தையிடம் மாப்பிள்ளை கேட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து ஷ்யாமிடம் இதுகுறித்து விசாரிக்கையில், தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனக்கு சிறிது காலம் அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுள்ளார் பிறகு அஞ்சலி குறித்து விசாரிக்கையில், அவருக்கு ஏற்கனவே திருமணமானதும், அவரது கணவரை பிரிந்து வாழ்வதும் ஷ்யாம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்தது.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்.. 5 லிட்டர் ஆசிட்டை வீசிய இளம்பெண்.. அரியானாவில் அதிர்ச்சி !

எனவே அஞ்சலியிடம் திருமணத்திற்கு ஷியாம் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஷ்யாமின் அத்தையும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்த அஞ்சலி, ஷ்யாமிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளர்.

அப்படி சம்பவத்தன்று பால் வாங்க கடைக்கு சென்ற ஷியாம் சிங்கை மடக்கிய அஞ்சலி, அவரிடம் தகராறு செய்துள்ளார். திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் ஷ்யாமோ தொடர்ந்து மறுத்துள்ளார். அப்போது தனது கையில் 5 லிட்டர் கேனில் வைத்திருந்த ஆசிட்டை ஷியாம் மீது ஊற்றியுள்ளர்.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்.. 5 லிட்டர் ஆசிட்டை வீசிய இளம்பெண்.. அரியானாவில் அதிர்ச்சி !

இதை துடிதுடித்து அலறிய ஷ்யாமின் கை, கால், உடல் என அனைத்து இடத்திலும் தீக்காயம் பட்டு கதறியுள்ளார். பின்னர் அவரை கண்ட அருகிலிருந்தவர்கள் இது குறித்து காவல்துறைக்கு அளித்த தகவல் அளித்தனர். மேலும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது ஷ்யாம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குற்றவாளியான அஞ்சலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் மீது இளம்பெண் ஒருவர் 5 லிட்டர் ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் அரியானாவில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories