இந்தியா

ம.பி : “அப்பா கிட்ட நா கூட்டிட்டு போறேன்..” சிறுமியை கிடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தந்தையின் நண்பர் !

தந்தையிடம் கூட்டி செல்வதாக கூறி, 8 வயது சிறுமியை கடத்தி சிறுமியின் தந்தையின் நண்பரே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ம.பி : “அப்பா கிட்ட நா கூட்டிட்டு போறேன்..” சிறுமியை கிடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தந்தையின் நண்பர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மத்தியப் பிரதேச மாநிலம், பர்வானி பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அடிக்கடி சிறுமியின் தந்தையின் நண்பர் வருவார். வரும்போதெல்லாம் சிறுமியிடம் கொஞ்சி விளையாடி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி பள்ளி முடிந்து வெளியே வந்து தந்தைக்காக காத்துக்கொண்டிருந்தாதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அங்கு வந்த நண்பர் சிறுமியை, "உனது அப்பாவிடம் அழைத்துசெல்கிறேன். என்னுடன் வா" என்று கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி, அவருடன் சென்றுள்ளார்.

ம.பி : “அப்பா கிட்ட நா கூட்டிட்டு போறேன்..” சிறுமியை கிடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தந்தையின் நண்பர் !

ஆனால் அந்த நபரோ சிறுமியை ஒரு இடிந்த கோட்டை போன்ற ஒரு இடத்திற்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை கண்ட அங்கிருந்த வழிப்போக்கர் ஒருவர், காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுமியை மீட்டனர். மேலும் குற்றவாளியையும் கைது செய்ய முயன்ற போது அவர் தப்பிச்சென்றுள்ளார்.

ம.பி : “அப்பா கிட்ட நா கூட்டிட்டு போறேன்..” சிறுமியை கிடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தந்தையின் நண்பர் !

பின்னர் தப்பியோடியவரை பின்தொடர்ந்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து சிறுமியிடம் நடைபெற்ற விசாரணையில், தனக்கு நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

தந்தையிடம் கூட்டி செல்வதாக கூறி, 8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் தந்தையின் நண்பரின் செயல் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories