இந்தியா

கேரளாவில் கோர விபத்து.. KSRTC பேருந்து மீது மோதிய சுற்றுலா பேருந்து.. 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!

கேரளாவில் அரசு பேருந்தும், பள்ளி சுற்றுலா பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் கோர விபத்து.. KSRTC பேருந்து மீது மோதிய சுற்றுலா பேருந்து.. 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்குச் சுற்றுலா வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் என 51 பேர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், பாலக்காடு - வடகஞ்சேரி நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேகமாக மோதியுள்ளது.

கேரளாவில் கோர விபத்து.. KSRTC பேருந்து மீது மோதிய சுற்றுலா பேருந்து.. 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!

இதில் பள்ளி மாணவர்கள் வந்த சுற்றுலா பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் சடலமாக மீட்டனர். மேலும் 41 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகே இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

கேரளாவில் கோர விபத்து.. KSRTC பேருந்து மீது மோதிய சுற்றுலா பேருந்து.. 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!

இந்த கோர விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சுற்றுலாவந்த பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories