இந்தியா

மனைவி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவது திருமணம்.. கணவருக்கு நடுரோட்டில் வைத்து பாடம் கற்பித்த முதல் மனைவி!

இரண்டாவது திருமணம் செய்த கணவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவது திருமணம்.. கணவருக்கு நடுரோட்டில் வைத்து பாடம் கற்பித்த முதல் மனைவி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணபள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர்க்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அகிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்துக்காக ரூ.20 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.

திருமணம் முடிந்து சில ஆண்டுகள் கழித்து இருவருக்கும் பிரச்சனை வரத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீகாந்த் தனது மனைவி அகிலாவை பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

மனைவி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவது திருமணம்.. கணவருக்கு நடுரோட்டில் வைத்து பாடம் கற்பித்த முதல் மனைவி!

இந்த விவகாரத்தை தனது உறவினர் ஒருவர் மூலம் அறிந்த அகிலா தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு கணவரின் புதிய வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும், அங்கிருந்து தனது கணவரை அழைத்துவந்த அவர், கணவரை மின் கம்பத்தில் கட்டி வைத்துள்ளார்.

பின்னர், கணவரை தொடர்ந்து செருப்பால் அடித்த அவர், செருப்பு மாலை அணிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸாருக்கு தெரிந்த நிலையில், அவர்கள் விரைவாக வந்து ஸ்ரீகாந்தை மீட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories