இந்தியா

ம.பி : பள்ளி பேருந்தில் வைத்து 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தரைமட்டமான ஓட்டுநரின் வீடு !

பள்ளிப் பேருந்தில் மூன்றரை வயது நர்சரி மாணவியை பேருந்து ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவை உலுக்கி உள்ள நிலையில் அந்த ஓட்டுனரின் வீடு தரைமட்டமாக இடிக்கப்பட்டுள்ளது.

ம.பி : பள்ளி பேருந்தில் வைத்து 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தரைமட்டமான ஓட்டுநரின் வீடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 3 வயதுடைய குழந்தை ஒன்று படித்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி சிறுமி பள்ளி பேருந்தில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது உடை மாற்றப்பட்டதை கண்ட பெற்றோர், இது குறித்து பள்ளி மற்றும் ஆசிரியைக்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் மாற்றவில்லை என்று தெரிவிக்கவே அவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.

ம.பி : பள்ளி பேருந்தில் வைத்து 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தரைமட்டமான ஓட்டுநரின் வீடு !

மேலும் அந்த சிறுமி தனக்கு வயிறு வலி என்று தெரிவிக்கவே உடனே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கவுன்சிலிங் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தனக்கு பள்ளி பேருந்துக்குள் வைத்து ஓட்டுநர் செய்த கொடுமையை அந்த சிறுமி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கவே, அவர்கள் முன்னிலையில் பேருந்து ஓட்டுநரை சிறுமி அடையாளம் காண்பித்துள்ளார்.

ம.பி : பள்ளி பேருந்தில் வைத்து 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தரைமட்டமான ஓட்டுநரின் வீடு !

இதையடுத்து சிறுமி என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்த அப்பள்ளி பேருந்து ஓட்டுநர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக பெண் உதவியாளர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். அப்போது அவரது வீடு சட்டத்திற்கு விரோதமாக கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில் சிறுமியை வன்கொடுமை செய்த ஓட்டுநரின் சட்ட விரோதமாக போபாலின் ஷாபுரா பகுதியில் உள்ள கட்டப்பட்ட வீட்டை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினார். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் மெம்மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories