இந்தியா

நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த கணவர்.. பெங்களூவில் பதறவைத்த சம்பவம் !

உடலுறவுக்கு வர மறுத்த மனைவியை சந்தேகமடைந்த கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்புடுத்தியுள்ளது.

நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த கணவர்.. பெங்களூவில் பதறவைத்த சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியை சேர்ந்தவர் பிரிதிவிராஜ். எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வரும் இவர், தனது மனைவி ஜோதிகுமாரி என்பவருடன் பெங்களூவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜோதிகுமாரி, தனக்கு 28 வயது என்று கூறி பிரிதிவிராஜை திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணம் முடிந்து சில மாதங்களில் அவருக்கு வயது 38 என்று பிரிதிவிராஜூக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பிரிதிவிராஜ் ஜோதி குமாரியுடன் பெரிதாக சண்டையிட்டுள்ளார். பின்னர் இருவரும் சமாதானமாகி உள்ளனர்.

நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த கணவர்.. பெங்களூவில் பதறவைத்த சம்பவம் !

இதையடுத்து அவர் தொலைபேசியில் விடமால் பேசி வந்துள்ளார். இருப்பினும் பிரிதிவிராஜ் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் பிரிதிவிராஜ் தனது மனைவியான ஜோதிகுமாரியுடன் நெருக்கமாக இருக்க விரும்பி அவரை உடலுறவு வைத்துக்கொள்ள கேட்டுள்ளார். அதற்கு ஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இவர் ஒவ்வொரு முறையும் கேட்க, அவர் அப்போதெல்லாம் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும் போனிலும் விடாமல் யாரிடமோ பேசிவந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பிரிதிவிராஜ், ஜோதிகுமாரியை கொல்ல நினைத்துள்ளார். அதற்கு அவரது பீகார் நண்பரான சமீர்குமார் என்பவரை நாடியுள்ளார்.

நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த கணவர்.. பெங்களூவில் பதறவைத்த சம்பவம் !

பின்னர் இருவரும் சேர்ந்து ஜோதிகுமாரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஜோதிகுமாரியை பிரிதிவிராஜ் உடுப்பியில் உள்ள மால்பே பகுதிக்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். இவர்களுடன் பிரிதிவிராஜ் நண்பரான சமீரும் சென்றுள்ளார். சுற்றுலா முடிந்த பிறகு, காரில் பெங்களூரு திரும்பி கொண்டிருந்த நேரத்தில் பிரிதிவிராஜும், சமீரும் சேர்ந்து ஜோதிகுமாரியின் கழுத்தை அவர் அணிந்திருந்த துப்பாட்டாவால் நெரித்துள்ளனர்.

இதில் துடிதுடித்து போன ஜோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது சடலத்தை அங்கு ஒரு காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று குழி தோண்டி புதைத்துள்ளனர்.

நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த கணவர்.. பெங்களூவில் பதறவைத்த சம்பவம் !

இதையடுத்து ஊர் திரும்பிய பிரிதிவிராஜ் சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து தனது மனைவியை காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அப்போது பிரிதிவிராஜ் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மாறி மாறி விசாரித்ததில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், ஜோதியை புதைத்த இடத்திலிருந்து அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினார். மேலும் பிரிதிவிராஜ் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர். உடலுறவுக்கு அழைத்த மனைவி மறுத்ததால் சந்தேகமடைந்த கணவர் அவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories