இந்தியா

கூட்டணி கட்சியையே உடைக்கப்பார்த்த பாஜக.. JDU குற்றச்சாட்டு! பீகாரில் கவிழ்கிறதா பா.ஜ.க கூட்டணி அரசு ?

லோக் ஜனசக்தி கட்சியை இரண்டாக உடைத்தது போல் ஜக்கிய ஜனதா தளத்தை உடைக்கப்பார்க்கின்றனர் என அக்கட்சியின் மாநில தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கூட்டணி கட்சியையே உடைக்கப்பார்த்த பாஜக.. JDU குற்றச்சாட்டு! பீகாரில் கவிழ்கிறதா பா.ஜ.க கூட்டணி அரசு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகாரில் 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கைக்கோர்த்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜே.டி.யு). இந்த தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொகுதி ஒதுக்கீடு செய்வதில் பிரச்சனை எழுந்தது. இருப்பினும் கூட்டணி உடையாமல் பா.ஜ.க தலைமை பார்த்துக் கொண்டது.

இந்த தேர்தலில் பா.ஜ.க, ஜே.டி.யு கூட்டணி எளிதில் வெற்றி பெற்றது. ஆனால் நிதிஷ்குமாரால் 43 இடங்களை மட்டுமே பெற முடிந்த நிலையில் பா.ஜ.கவும் 74 இடங்களில் வெற்றி பெற்றது.

கூட்டணி கட்சியையே உடைக்கப்பார்த்த பாஜக.. JDU குற்றச்சாட்டு! பீகாரில் கவிழ்கிறதா பா.ஜ.க கூட்டணி அரசு ?

அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், பா.ஜ.கவில் இருந்துதான் முதல்வராக ஒருவரை நியமிக்க வேண்டும் என அதன் கட்சி தலைவர்கள் நிதிஷ்குமாருக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் மீண்டும் நிதிஷ்குமாரை முதல்வராக்க பா.ஜ.க ஒத்துக் கொண்டது. மேலும் பா.ஜ.க துணை முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டது.இதில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

சமீபகாலமாக நிதிஷ்குமார் அரசு மீது பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் பகிரங்க ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அதற்கு ஜே.டி.யு தலைவர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து பா.ஜ.க நிகழ்வுகளை நிதிஷ்குமார் புறக்கணித்து வந்தார்.

கூட்டணி கட்சியையே உடைக்கப்பார்த்த பாஜக.. JDU குற்றச்சாட்டு! பீகாரில் கவிழ்கிறதா பா.ஜ.க கூட்டணி அரசு ?

இந்த நிலையில், இந்த கூட்டணி விவகாரம் தற்போது பட்டவர்த்தமாக வெளிப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிப்பதாக அந்தக் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் அளித்தப் பேட்டியில், ``லோக் ஜனசக்தி கட்சியை இரண்டாக உடைத்தது போல் ஜக்கிய ஜனதா தளத்தை உடைக்கப்பார்க்கின்றனர். 2000-ம் ஆண்டு தேர்தலின் போதே அதற்கான முயற்சி நடந்தது. ஆனால் நிதிஷ் குமார் அந்த சதியை கண்டுபிடித்து அதை தவிர்த்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக பிஹாரில் பா.ஜ.க-ஜே.டி.யு கூட்டணி ஆட்சி முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஜே.டி.யு பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியோடு கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories