இந்தியா

தந்தையை அடித்த நபரை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்.. 7 மாதம் காத்திருந்து பழிதீர்த்த அதிர்ச்சி சம்பவம்!

டெல்லியில் தந்தையை அடித்த நபர் மீது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையை அடித்த நபரை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்.. 7 மாதம் காத்திருந்து பழிதீர்த்த அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியைச் சேர்ந்தவர் ஜாவெத். இவர் எச்4 ப்ளாக் பகுதியில் அமர்ந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுவன் திடீரென தான் மறைத்து எடுத்து வந்த துப்பாக்கியால் அவரை நோட்டி சுட்டுள்ளான். இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.

தந்தையை அடித்த நபரை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்.. 7 மாதம் காத்திருந்து பழிதீர்த்த அதிர்ச்சி சம்பவம்!

இதையடுத்து அச்சிறுவனையும் அவனது கூட்டாளிகளையும் போலிஸார் பிடித்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. 7 மாதங்களுக்கு முன்பு சிறுவனின் தந்தையை ஜாவெத் அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஜாவெத்தை, சிறுவன் பழிவாங்க வேண்டும் என நினைத்துள்ளான். இதற்காகத் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து ஜூலை 15ம் தேதி சிறுவனும் அவரது நண்பர்களும் சேர்ந்து எச்4 ப்ளாக் பகுதியில் அமர்ந்திருந்தபோது ஜாவெதை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பலத்த காயமடைந்த சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு ஜாவெத் சிகிச்சைப் பெற்று வருகிறார். சிறுவன் ஜாவெத்தை துப்பாக்கியால் சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலிஸார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories