இந்தியா

மாமனாரை காலால் மிதித்து கொலை செய்த மருமகள்.. நிலத்தகராரில் நடத்த அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன?

நிலத்தகராரில் மாமனாரை காலால் மிதித்து மருமகள் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமனாரை காலால் மிதித்து கொலை செய்த மருமகள்.. நிலத்தகராரில் நடத்த அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாரா மாவட்டத்திலுள்ள நாத்புரா கிராமத்தை சேர்ந்தவர் பதியா கட்டாரா. இவருக்கும் இவர் மருமகளுக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று மாமனாருக்கும் மருமகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மருமகள் மாமனாரை தாக்கியுள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மருமகளை பிடித்துள்ளனர்.

மாமனாரை காலால் மிதித்து கொலை செய்த மருமகள்.. நிலத்தகராரில் நடத்த அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன?

ஆனாலும், ஆத்திரம் அடங்காத மருமகள் காலால் மாமனாரின் அந்தரங்க பகுதியில் பலமுறை எட்டி உதைத்துள்ளார். இதில் சுருண்டு விழுந்த மாமனாரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இரண்டு நாள் மருத்துவமனையில் அவர் இருந்த நிலையில், பின்னர் வீடு திரும்பியுள்ளார். ஆனால் அடுத்த இரண்டு நாளில் அவர் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அந்தரங்க பகுதியில் வலியோடு துடித்த அவரை மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாமனாரை காலால் மிதித்து கொலை செய்த மருமகள்.. நிலத்தகராரில் நடத்த அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன?

இந்த சம்பவம் தொடர்பாக போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories