இந்தியா

காயவைத்த துணியை எடுக்கும்போது நடந்த துயரம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: சோகத்தில் கிராமம்!

தெலங்கானாவில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காயவைத்த துணியை எடுக்கும்போது நடந்த துயரம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: சோகத்தில் கிராமம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்திற்குட்பட்ட பீடி தொழிலாளர்கள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அகமது. இவரது மனைவி பர்வீன். இந்த தம்பதிக்கு அத்னான் என்ற மகனும், மஹீம் மீதும் என்ற மகளும் இருந்தனர்.

இந்நிலையில் பர்வீன் இவர்களது குடிசை வீட்டில் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் துணிகளை காயவைத்துள்ளார். பின்னர் காய்ந்த துணிகளை பர்வீன் எடுத்தபோது மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

காயவைத்த துணியை எடுக்கும்போது நடந்த துயரம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: சோகத்தில் கிராமம்!

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து 2 குழந்தைகளும் பெற்றோர்களை கட்டிப்பிடித்தபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் 4 பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காயவைத்த துணியை எடுக்கும்போது நடந்த துயரம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: சோகத்தில் கிராமம்!

இதையடுத்து இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories